டிசம்பர் 19, 2020

விசுவக்குடி அணை திறப்பு. முழுநிகழ்வு காட்சிகள்


 பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்காவில் விசுவக்குடி அணை உள்ளது. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக 33 அடி கொள்ளளவு கொண்ட அணை நிரம்பியது. 

இன்று டிசம்பர் 19 பெரம்பலூர் மாவட்ட சட்ட மன்ற உறுப்பினர்களான ரா. தமிழ் செல்வன் மற்றும் குன்னம் சட்ட மன்ற உறுப்பினர் டி.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் வெங்கட பிரியா முன்னிலையில் அணையை திறப்பதற்காக நிகழ்வில் கலந்து கொண்டு அணை நீரை திறந்து வைத்தனர்.
கல்லாற்று நீரை பகிர்ந்து கொள்வதில் இரு கிராமங்கள் இடையே முறுகல் நிலை

 


கல்லாற்று நீரை பகிர்ந்து கொள்வதில் விசுவக்குடி மற்றும் வெங்கலம் கிராம் மக்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டது. பின்னர் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.

இரு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கலெக்டரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்


 பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்காவில் விசுவக்குடி அணை உள்ளது. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக 33 அடி கொள்ளளவு கொண்ட அணை நிரம்பியது. 

இன்று டிசம்பர் 19 பெரம்பலூர் மாவட்ட சட்ட மன்ற உறுப்பினர்களான ரா. தமிழ் செல்வன் மற்றும் குன்னம் சட்ட மன்ற உறுப்பினர் டி.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் வெங்கட பிரியா முன்னிலையில் அணையை திறப்பதற்காக நிகழ்விற்கு வந்திருந்தனர்.

அப்போது அங்கிருந்த அன்னமங்கலம் கிராம மக்கள் தங்கள் ஊர் ஏரிக்கும் அணையில் இருந்து தண்ணீர் வேண்டும் என கூறி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



டிசம்பர் 18, 2020

நாளை விசுவக்குடி அணை திறக்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு


பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடி அணையிலிருந்து விவசாய பயன்பாட்டிற்காக  மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி பா ஸ்ரீ வெங்கட பிரியா.இ.ஆ.ப. அவர்களால் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் திரு ஆர் டி ராமச்சந்திரன் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு இரா தமிழ்ச்செல்வன் அவர்கள் முன்னிலையில் நாளை (19.12.20) காலை 10:45 அளவில் தண்ணீர் திறந்து வைக்கப்படவுள்ளது.

V POST

டிசம்பர் 17, 2020

விசுவக்குடி அணையில் நீர் திறப்பு எப்போது?


பெரம்பலூர் பொதுப்பணித்துறை SDO (SUB DIVISION OFFICER) பிரபாகரன் விசுவக்குடி அணைக்கட்டை தற்போது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விசுவக்குடி அணை நீர் பயன்பாட்டிற்கு எப்போது திறக்கப்படும் என கேட்டதற்கு,

நேற்று இரவு முதல் பச்சை மலை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. விசுவக்குடி அணைக்கு கல்லாற்றிலிருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.

33 அடி கொள்ளளவு கொண்ட விசுவக்குடி அணையின் நீர்மட்டம் தற்போது 29 அடியாக உள்ளது. அணையின் முழு கொள்ளளவான 33 அடியை எட்டிய பிறகே அணை திறக்கப்படும் என தெரிவித்தார்.

அப்போது AE நல்லுசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குதரத்துல்லா, 2-வது வார்டு உறுப்பினர் வதூத் ஆகியோர் உடனிருந்தனர்.

V POST

டிசம்பர் 07, 2020

வரத்து வாய்க்கால் சீரமைப்பு

 


பச்சை மலையில் உற்பத்தியாகி வரும் காற்றில் இருந்து விசுவக்குடி ஏரிக்கு வரும் வரத்து கால்வாயில் உள்ள முட்புதர்களை அகற்றி இன்று (டிசம்பர் 07) சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. படம்: அருகில் ஊராட்சியில் தலைவர் மருதாம்மாள் மற்றும் இரண்டாவது வார்டு உறுப்பினர் குதரத்துல்லா. V POST

நவம்பர் 21, 2020

வபாத் செய்தி


நமதூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அப்துல் ஹக் அவர்களின் தாயார் பல்கீஸ் (87) அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக சற்றுமுன் வபாத்தாகி விட்டார்கள்.

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 6 மணியளவில் விசுவக்குடி மையவாடியில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.

நவம்பர் 17, 2020

புதிய தாசில்தார்


வேப்பந்தட்டை தாலுக்காவில்  கவிதா என்பவர் தாசில்தாராக பணிபுரிந்து வந்தார். தற்போது அவர் பணிமாறுதல் காரணமாக சென்றுவிட்டார்.

அவருக்கு பதிலாக கிருஷ்ணராஜ் என்பவர் வேப்பந்தட்டை புதிய தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இதற்கு முன்பு ஆலத்தூர் தாலுக்காவில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக இருந்தார். V POST

நவம்பர் 05, 2020

நவம்பர் 02, 2020

புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்றார்
பெரம்பலூர் மாவட்டத்தின் 14 வது ஆட்சியராக ஸ்ரீ.வெங்கடபிரியா இன்று நவம்பர் 02 மாவட்ட ஆட்சியரகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அக்டோபர் 25, 2020

இறப்பு செய்தி


விசுவக்குடி மூன்றாம் வீதியில் வசிக்கும் முத்தலிப் (ஓய்வு ஆசிரியர் - சுண்டல்) அவர்களின் மனைவி ராபியா அவர்கள் சற்று முன் (அக்டோபர் 25) வபாத்தாகி விட்டார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அக்டோபர் 24, 2020

ஜமாத் செய்தி


விசுவக்குடி பள்ளிவாசலில் இன்று சனிக்கிழமை (அக்டோபர் 24) ஜமாத் கூட்டம் நடைபெற்றது. இதற்கு அத்-தக்வா பள்ளிவாசலின் இமாம் மௌலானா முஹம்மது சுலைமான் அவர்கள் தலைமை ஏற்றார்.

இதில் ஜமாத் பொருளாளர்  ஓய்வு ஆசிரியர் அமானுல்லா அவர்கள் வரவு செலவு கணக்கிணை வாசித்து காண்பித்தார். பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய தலைவராக  இப்ராஹிம் (சுருட்டை) அவர்களும், துணை  தலைவராக போலிஸ் ஓய்வு சபியுல்லா அவர்களும், செயலாளராக முஸ்தபா அவர்களும், துணை செயலாளராக அப்துல் கரீம் (சாலி) அவர்களும் மற்றும் பொருளாளராக ஓய்வு ஆசிரியர் அமானுல்லா அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

செப்டம்பர் 09, 2020

விசுவக்குடி திமுக கிளை செயலாளர் மறைவு

விசுவக்குடி திமுக கிளை செயலாளராக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருபவர் பாஜி எனும் சி.அமீனுதீன். 60 வயதை கடந்த இவர் விசுவக்குடி பேருந்து நிறுத்தம் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார்.

இன்று புதன்கிழமை மாலை சுமார் 6:30 மணியளவில் உடல் நலக்குறைவு காரணமாக அவரது வீட்டில் இயற்கை எய்தினார். 

இவரது உடல் நாளை ( 10 செப்டம்பர் 2020 ) வியாழக்கிழமை மதியம் விசுவக்குடி அடக்கத்தளத்தில் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.

ஆழ்ந்த அனுதாபங்கள் 😢

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்

ஜூலை 30, 2020

இறப்பு செய்தி

விசுவக்குடி முதல் தெருவில் வசிக்கும் அப்துல் சலாம் அவர்களின் தாயார் கட்ட ஜபார் அவர்களின் மனைவி ஜெமீலா பீவி அவர்கள் சற்று முன் வபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

இன்ஷா அல்லா நாளை வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைக்கு பிறகு விசுவக்குடி கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. V POST

இறப்பு செய்தி


விசுவக்குடி முதல் தெருவில் வசிக்கும் அப்துல் சலாம் அவர்களின் தாயார் கட்ட ஜபார் அவர்களின் மனைவி ஜெமீலா பீவி அவர்கள் சற்று முன் (ஜுலை 30) வபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

இன்ஷா அல்லா நாளை வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைக்கு பிறகு விசுவக்குடி கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.

ஜூலை 26, 2020

விசுவக்குடியில் உடல்நலக்குறைவால் குரங்கு மரணம்
விசுவக்குடி பள்ளிவாசல் தெருவில் காயத்தின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு குரங்கு ஒன்று மரணவேதனையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தது.

இதனை பார்த்து காப்பாற்ற வேண்டும் என கருதிய அந்த பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

வனத்துறையினர் வந்து சிகிச்சை அளித்து அந்த குரங்கை வனப்பகுதியில் விட்டுவிடுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில், வனத்துறையினர் வருவதற்கு 1½ மணிநேரம் தாமதமானதால் அந்த குரங்கு பரிதாபமாக துடிதுடித்து இறந்து போனது.

பின்னர் வந்த வனத்துறையினர் பரிசோதனை செய்து குரங்கு இறந்துவிட்டது, வேப்பந்தட்டை கால்நடை மருத்துவரிடம் இறந்ததற்கான காரணத்தை அறிந்து, சான்றிதழ் பெற்ற பின் வனப்பகுதியில் புதைத்து விடுவோம் என கூறி குரங்கை ஒரு சாக்கு பையில் போட்டு இரண்டு சக்கர வாகனத்தில் அலட்சியமாக எடுத்து சென்றனர்.  இதை பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக இருந்தது.

ஜூலை 05, 2020

சவுதியில் இறந்த இந்துவின் உடலை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த தமுமுக தன்னார்வலர்கள் !

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரசலூர் கிராமத்தை சேர்ந்தவர் கந்தன்(வயது 57). சவுதி அரேபியா நாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார்.

உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி உயிரிழந்துவிட்டார். அவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

கந்தன் இறந்த செய்தி குடும்பத்தினருக்கு தெரிந்தவுடன் மாவட்ட நிர்வாகத்தை அணுகி, உடலை மீட்டுத்தர கோரிக்கை மனு அளித்தனர். அப்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்ததால், அவரது உடலை கொண்டு வருவதில் சிக்கல் நீடித்தது.

இந்நிலையில் கந்தனின் குடும்பத்தினர் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உடலை இந்தியா கொண்டுவர உதவுமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து த.மு.மு.க. மாநில பொது செயலாளர் ஹாஜாகனி, சவுதி மண்டல த.மு.மு.க. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உடலை கொண்டுவர முயற்சி மேற்கொண்டார். அங்குள்ள நிர்வாகிகள் சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் பேசி கந்தனின் உடலை சென்னை விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் சரக்கு விமானம் வாயிலாக அனுப்பி வைத்தனர்.

விமானத்தில் வந்த உடலை சென்னை விமான நிலையத்திலிருந்து பெற்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் ஆம்புலன்சில் ஏற்றி மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ஹயாத் பாஷா, மாவட்ட தலைவர் சுல்தான் மைதீன், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் குதரத்துல்லா உள்ளிட்டோர் உடலை அரசலூர் கிராமத்திற்கு கொண்டுவந்து குடும்பத்தினரிடம் நேற்று ஒப்படைத்தனர்.

அங்கு கந்தனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கந்தனின் உடலை அரசலூர் கொண்டு வர உதவிய த.மு.மு.க.வினருக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவித்து கொண்டனர்.













ஜூன் 10, 2020

வெங்கனூரில் தர்காவிற்கு சொந்தமான வக்பு நிலம் ஆக்கிரமிப்பு

*

வக்பு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி மீட்க வேண்டும்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெங்கனூர் கிராமத்தில் ஹஜ்ரத் சையத் முஸ்தபா தர்கா உள்ளது.  இந்த தர்காவினை சார்ந்து சர்வே எண் 499 ல் 6.89 ஏக்கர் நிலம் உள்ளது.

முஸ்லீம்கள் பயன்பாட்டிற்காக நவாப் காலத்தில்  கொடுக்கப்பட்ட இந்த நிலத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் தற்போது தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கட்டுபாட்டில் உள்ளது.

இந்நிலையில் இந்த வக்பு நிலத்தின் குறிப்பிட்ட பகுதி அருகிலுள்ள கிராமத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இந்த தர்காவின் முத்தவல்லியாக உள்ள அப்துல் சலாம் பலமுறை கூறியும் ஆக்கிரமிப்பை அகற்ற மறுத்து வருகின்றனர்.

நாம் அனைவரும் ஒன்றுபட்டு முயற்சி மேற்கொண்டால் ஆக்கிரமிப்பில் உள்ள வக்பு சொத்தை மீட்க முடியும். அதற்கு சமூக ஆர்வலர்கள், சமுதாய அமைப்பினர் அனைவரும்  சம்மந்தப்பட்ட அரசு துறைகளுக்கு அழுத்தம் தர முன்வர வேண்டும்.

ஏப்ரல் 19, 2020

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் அன்னமங்கலம்  ‘இளைஞர் குழு’ அசத்தல்
பெரம்பலூர் மாவட்டம், அன்னமங்கலம் ஊராட்சியில் பல்வேறு விதமான கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் அந்த ஊர் இளைஞர்கள் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அன்னமங்கலத்தில் உள்ள "இயற்கை இளைஞர்கள்" என்ற குழு சமூக விலகல் குறித்த விழிப்புணர்வு, வாகன தணிக்கை, இலவசமாக மாஸ்க் வழங்குதல், கிருமி நாசினி தெளித்தல், பொதுமக்களை ஒழுங்கு படுத்துதல், கபசுர நீர் வழங்கல், ஊரடங்கு சமயத்தில் உலாவரும் இளைஞர்களை கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளில் சுயமாக ஈடுபட்டு வருவது மட்டுமில்லாமல் ஊராட்சியில் உள்ள மற்ற கிராமங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகின்றனர். வாழ்த்துக்கள்.


துப்புரவு பணியாளர்களை கௌரவித்த ஊராட்சி தலைவர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் ஊராட்சியில் வேலை பார்த்து வரும்  துப்புரவு பணியாளர்கள் உட்பட 25 தொழிலாளர்களுக்கு அரிசி, மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் இன்று வழங்கப்பட்டது.

அன்னமங்கலம் ஊராட்சியில் உள்ள சாலைகள் மற்றும் தெருவில் இருக்கும் குப்பைகளை அகற்றுதல். சாக்கடைகளை  சுத்தப்படுத்துதல் போன்ற பணிகளை துப்புரவு தொழிலாளர்கள் அர்ப்பணிப்புடன் செய்து வருகின்றனர்.

அவர்களை கௌரவிக்கும் வகையில் தன் சொந்த செலவில் அன்னமங்கலம் ஊராட்சி தலைவர் மருதாம்மாள் செல்வகுமார் சுமார் 10 ஆயிரம் மதிப்பிலான நிவாரண பொருட்களை இன்று (ஏப்ரல் 19) ஊராட்சி அலுவலகத்தில் வழங்கினார்.

இந்த செயல் இப்பகுதி மக்களிடையே பெரும் பாராட்டை பெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் அனுசியா மேரி மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

மார்ச் 25, 2020

விசுவக்குடியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி
பெரம்பலூர் மாவட்டம், அன்னமங்கலம் ஊராட்சியில் உள்ள விசுவக்குடியில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

இயந்திரம் மூலம் விசுவக்குடியில் உள்ள  வீடுகள் மற்றும் தெருக்களில் இன்று புதன்கிழமை (மார்ச் 25) கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. பணியை ஊராட்சியின் 2வது வார்டு உறுப்பினர் குதரத்துல்லா பாா்வையிட்டாா்.

மார்ச் 24, 2020

விசுவக்குடி பள்ளிவாசலில் தொழுகைகள் நிறுத்தப்பட்டு, மூடப்பட்டது.!
கொரோனா வைரஸ் (COVID-19) தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளது. காரணம், மனிதர்கள் ஒருவருக்கொருவர் நெருங்கி இருப்பதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதால், மக்கள் கூட்டம் கூட்டமாக சங்கமிக்கும் அனைத்து வாய்ப்புகளையும் அரசு கட்டுபடுத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விசுவக்குடி பள்ளிவாசலிலும் தொழுகைகள் நிறுத்தப்பட்டு மூடப்பட்டுள்ளது.

மேலும் தொழுகைக்கான பாங்கு (அழைப்பு) ஐவேளையும் மசூதிகளில் ஒலிக்கும். அதனைத் தொடர்ந்து, அவரவர் வீட்டில் இருந்தபடி தொழுது கொள்ளும்படி ஜமாத் நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டு பள்ளிவாசல் முன்பு  இன்று (மார்ச் 24) அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு மக்களிடையே வரவேற்பும் வருத்தமும், கலந்த விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.



இரங்கல் செய்தி
விசுவக்குடியில் சமுதாய அமைப்புகளின் வெளிச்சம் உங்களால் தான் கிடைத்தது. இங்கு முதன் முதலில் பொதுக்கூட்டம் நடைபெற்றதும் அதுவும், சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டமாக நடைபெறவும் நீங்கள்தான் காரணம்.

அந்த நிகழ்வை நீங்கள் தலைமை ஏற்றும் நடத்தினீர்கள். அப்போது "அரசியலும், மார்க்கமும் வெவ்வேறு அல்ல, இரண்டும் நமது கண்கள்" என்று நீங்கள் உரையாற்றி பேசியது இன்னும் இரண்டு காதுகளிலும் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

நான் நூலகத்தில் இருந்ததைவிட உங்கள் வீட்டில் உங்களுடன் பேசிக்கொண்டு இருந்ததுதான் அதிகம். ஏனெனில் உங்கள் அறையில் கிதாபுகள் அதிகம். ஏதேனும் விளக்கம் கேட்டால் அலமாரியில் இருக்கும் உருது மொழி கிதாபை எடுத்து தமிழில் மொழி பெயர்த்து விளக்கம் தருவீர்கள். இன்று உங்களை போன்ற மார்க்க அறிஞர் விசுவக்குடி யில் இல்லை.

நீங்கள் பல மார்க்க அறிஞர்களை உருவாக்கியவர். நான் உங்களின் மாணவன் இல்லை. ஆனால், திருச்சி, திண்டுக்கல் சாலையில் உள்ள ஒரு அரபு கல்லூரியில் பயின்றேன். அப்போது எனக்கு குர்ஆன் கற்றுக்கொடுத்த உஸ்தாதின் உஸ்தாத் நீங்கள். இப்படி உங்களைப் பற்றி சொல்ல ஏராளமான... விஷயங்கள் உள்ளது.

அன்பானவர், பழகுவதற்கு எளிமையான வருமான மௌலானா அப்துல் ஹை ஹள்ரத் ஆகிய உங்களின் இரங்கல் செய்தி கேட்டு உங்கள் நினைவுகள் என்னை வாட்டி வதைக்கிறது.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அல்லாஹ் உங்களுக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயர்ந்த அந்தஸ்தை வழங்குவானாக...

நினைவுகளுடன்...
தௌ.மு.ஜகரிய்யா


பிப்ரவரி 16, 2020

விசுவக்குடி ஜல்லிக்கட்டு ஆல்பம் 2020
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், விசுவக்குடி கிராமத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 16) ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. இதில் 480 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.