செப்டம்பர் 21, 2015

விசுவக்குடியில் சொற்பொழிவு நிகழ்ச்சி
விசுவக்குடி அல் ஜன்னத் சமுதாய நலக் கூடத்தில் நேற்று 20ம் தேதி ஞாயிற்றுக் கிழமை இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பெரம்பலூரில் உள்ள இர்ஷாதுல் உலூம் அரபு கல்லூரியின் முதல்வர் மௌலவி இஹ்சானுல்லா பாஜில் பாகவி தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் நபிகள் நாயகத்து இஸ்லாமும், நவீன இஸ்லாமும் என்கிற தலைப்பில் சென்னை அடையாரில் உள்ள அல் ஹுதா அரபு கல்லூரியின் முதல்வர் சதீதுத்தீன் பாகவி சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார்.

விசுவக்குடி முஸ்லிம் ஜமாத்தார்களும், அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினரும் ஏற்பாடு செய்த இந் நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள் மற்றும் மாணவ மாணவியர் என ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

செப்டம்பர் 20, 2015

விசுவக்குடி பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க தமுமுக கோரிக்கை
பெரம்பலூர் மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று (19) நடைப்பெற்றது.

வடக்கு மாதவி சாலையில் உள்ள NSK மஹாலில் மாலை 4 மணிக்கு நடைப்பெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் முஹம்மது இலியாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விசுவக்குடி குதரத்துல்லா, மண்டல தேர்தல் அதிகாரி மீரான் மொய்தீன், மாநில தேர்தல் ஆணையர் தாஹிர் பாஷா, மனிதநேய

செப்டம்பர் 18, 2015

விசுவக்குடி இளைஞர் சவூதி அரேபியாவில் பலி (படங்கள் இணைப்பு)
விசுவக்குடியில் உள்ள ஹழ்ரத் முகமது அலி அவர்களின் மகன் ஜமால் முஹம்மது (32) சவூதி அரேபியாவில் கடந்த 9ம் தேதி நடைபெற்ற சாலை விபத்தில் வபாத் ஆனார்.

இவர் சவூதி அரேபியா ரியாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கனரக வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவர் சவூதி அரேபியா வந்து ஒரு ஆண்டு காலம் ஆன நிலையில் இந்த சாலை விபத்து இடம் பெற்றுள்ளது.

சவூதி அரேபியா கிழக்கு மாகாணத்தில் உள்ள அல் சல்ஹசா நகரத்தில் அல் மனா மருத்துவமனை அருகில் உள்ள அடக்கஸ்தளத்தில் 18ம் தேதி வெள்ளி கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு இறுதி சடங்கு நடைப்பெற்றது.