டிசம்பர் 31, 2015

வருது வருது விசுவக்குடி அணை!
வணக்கம் நண்பர்களே...

தமிழ்நாட்டில் உள்ள மேட்டூர் அணை, முல்லைப் பெரியாறு அணை, சாத்தனூர் அணை எனச் சொல்லும் அந்தப் புகழ்பெற்ற பட்டியலில் சீக்கிரமே எங்கள் ‘விசுவக்குடி அணை’யும் வரும். இன்னும் திறப்பு விழா காணாத அந்த அணைக்கு ஒரு விசிட் அடித்தோம். அந்த அணை பற்றிய தகவல்கள்...
  • ஆங்கிலேயர் ஆட்சி செய்த 1942-ம் ஆண்டில் இருந்தே, ஆலோசிக்கப்பட்ட திட்டம், ‘விசுவக்குடி கல்லாறு நீர்த்தேக்கத் திட்டம்’. தற்போது நிறைவேற்றப்பட்டதில், மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
  • 2011-ல், ‘இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையான, விசுவக்குடி கல்லாறு நீர்த்தேக்கத் திட்டம் நிறைவேற்றப்படும்’ என தனது தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். 2012 செப்டம்பர் 28-ல் அணைக்கான வேலைகள் தொடங்கப்பட்டன.

டிசம்பர் 23, 2015

வாக்குறுதி அளித்துவிட்டு நிறைவேற்றாமல்  4 கிராம மக்களை ஏமாற்றிய அரசு அதிகாரி. இது வேப்பந்தட்டையில்..!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் அன்னமங்கலம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில்  விசுவக்குடி, முகமது பட்டினம், பிள்ளையார் பாளையம், அன்னமங்கலம் பகுதிகளில் உள்ள சாலைகள் கடந்த பல ஆண்டுகளாக போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது.

பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்ற இடங்களுக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

 ஊராட்சியின் தலைவர் முதல் முதல்வரின் தனிபிரிவு வரை கோரிக்கை வைத்தும் இந்த சாலை தொடர்ந்து சீர்செய்யபடாமல் உள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த மக்கள்

டிசம்பர் 22, 2015

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மனு
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்றுத் தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஜல்லிக்கட்டு காளைகளுடன் வந்து திங்கள்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் அன்னமங்கலம், டி.களத்தூர், பூலாம்பாடி, கள்ளப்பட்டி ஆகிய கிராமங்களில் கடந்த 40 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில், உச்சநீதிமன்ற தடையால் கடந்த 4 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்த முடியவில்லை.
விசுவக்குடி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 20 பேர் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறோம். காளைகளுக்கு பல்வேறு ஊட்ட உணவுகளையும், நடைப் பயிற்சி, நீச்சல் பயிற்சிகள் அளித்து மாதம்தோறும் ரூ. 20 ஆயிரம் செலவழித்து வருகிறோம். எனவே, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த, தமிழக அரசிடம் அனுமதி பெற்றுத் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
தினமணி
பச்சைமலை - பல தகவல்கள்

1. தமிழ்நாட்டில் உள்ள மலைகளில் பச்சைமலையும் ஒன்று.

2.வனத்துறையின் கட்டுபாட்டில் உள்ள பச்சைமலை சுமார் 19 ஆயிரத்து 76 ஹெக்டேர் பரப்பில் விரிந்துள்ளது.

3. இம்மலை கடல் மட்டத்தில் இருந்து 1072 மீட்டர் வரை உயரம் கொண்டது.

4. பச்சைமலை பரப்பளவில் சுமார் 527 சதுரகிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.

5. பச்சைமலையில் வாழும் மக்களை பச்சை மலையாளி எனவும் அழைகின்றனர்.

6. பச்சைமலைவாழ் மக்கள் பெரும்பாலும் கவுண்டர் சாதி இனத்தை

டிசம்பர் 21, 2015

பரவசமூட்டும் பச்சைமலை (படங்கள் இணைப்பு...)
பெரம்பலூர், திருச்சி மற்றும் சேலம் மாவட்டங்களின் மையபகுதியில் பச்சைமலை உள்ளது. பெயருக்கு ஏற்றாற்போல எங்கும் பச்சை போர்த்திய மரங்கள், ஜில் என்ற காற்று, மூலிகை சுவாசம் என மறக்க முடியாத நிகழ்வாக உள்ளது.

வழக்கமான கோடை சுற்றுலவாக இல்லாமல், புதிய அனுபவம் பெறவிரும்புவோர் பச்சைமலை சுற்றுலா சென்று வரலாம்.

பச்சைமலையின் அனைத்து பகுதிகளுக்கும் தார்சாலை வசதி உள்ளது.

மலையின் அழகை காண திருச்சி மாவட்டம் சோபனாபுரம் வழியாகவும், கீரம்பூர் வழியாகவும் உள்ள வழிதடங்களில் சென்று ரசித்து வரலாம். பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

டிசம்பர் 20, 2015

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி விசுவக்குடியில் தமுமுக நடத்துகிறது
விசுவக்குடியில் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி அல் - ஜன்னத் சமுதாய நலக்கூடத்தில் வருகிற 27ம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடைபெறுகிறது.

காலை 9:30 மணியளவில் தொடங்கும் நிகழ்ச்சியில் அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் பா.செல்வகுமார் அவர்களும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின்