விசுவக்குடி பள்ளிவாசல் தெருவில் காயத்தின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு குரங்கு ஒன்று மரணவேதனையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தது.
இதனை பார்த்து காப்பாற்ற வேண்டும் என கருதிய அந்த பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
வனத்துறையினர் வந்து சிகிச்சை அளித்து அந்த குரங்கை வனப்பகுதியில் விட்டுவிடுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில், வனத்துறையினர் வருவதற்கு 1½ மணிநேரம் தாமதமானதால் அந்த குரங்கு பரிதாபமாக துடிதுடித்து இறந்து போனது.
பின்னர் வந்த வனத்துறையினர் பரிசோதனை செய்து குரங்கு இறந்துவிட்டது, வேப்பந்தட்டை கால்நடை மருத்துவரிடம் இறந்ததற்கான காரணத்தை அறிந்து, சான்றிதழ் பெற்ற பின் வனப்பகுதியில் புதைத்து விடுவோம் என கூறி குரங்கை ஒரு சாக்கு பையில் போட்டு இரண்டு சக்கர வாகனத்தில் அலட்சியமாக எடுத்து சென்றனர். இதை பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக இருந்தது.
