செப்டம்பர் 25, 2019

விசுவக்குடியில் மழை வேண்டி சிறப்பு தொழுகை
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் தற்போது பருவ மழை பெய்தாலும் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில் மழை பெய்யவில்லை. அதாவது எந்த ஊரிலும் ஏரி குளங்களில் தண்ணீர் நிரம்பவில்லை. இதனால் பெரும்பாலான ஊர்களில் குடிநீர் பஞ்சம் இருந்து வருகிறது. மேலும் கிணற்றுப்பாசனம் மூலம் செய்யக்கூடிய விவசாயமும் பெரும் பாதிப்படைந்துள்ளது.

எனவே நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில் மழை பெய்ய வேண்டி விசுவக்குடி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை நடத்த முடிவு செய்தனர்.

 அதன்படி இமாம் முஹம்மது சுலைமான் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்றுதிரண்டு அத்-தக்வா பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக அருகிலுள்ள களத்துமேடு என்ற பகுதிக்கு சென்றனர். அங்கு அனைவரும் ஒன்றுகூடி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் பஞ்சம் நீங்க வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் சிறப்பு தொழுகை நடத்தினர்.

நன்றி: தினத்தந்தி
செப்டம்பர்: 25, 2020

https://youtu.be/_QCG00d5UrM


அன்னமங்கலம் ஊராட்சியில் குண்டும், குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி நிற்கும் அவலம்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் முகமது பட்டினம் கிராமத்தில் இருந்து கிருஷ்ணாபுரம் செல்லும் முதல் ஒரு கிலோமீட்டர் சாலை புதிதாக போடப்பட்டு 2 மாதங்கள் கூட ஆகவில்லை.

மிதமான மழைக்கு கூட தாக்குபிடிக்காத இந்த சாலை தற்போது குண்டும் குழியுமாக குளம்போல் காட்சியளிக்கிறது.


நன்றி: தினகரன்
செப்டம்பர்: 25, 2020


செப்டம்பர் 22, 2019

40 ஆண்டுகளுக்கு முன் உதித்த கனவை நிறைவேற்ற 45 நாட்களில் உறைபனி மலைகளை கண்டு ரசிக்க பைக்கில் சென்ற விசுவக்குடி கட்டிட தொழிலாளி
பனிப் பிரதேசங்களை பக்கத்தில் நின்று பார்த்து ரசிக்க வேண்டுமென்பது பால்ய வயது கனவு. 14 ஆயிரம் கிமீ பைக்கில் பயணித்து, கனவை நனவாக்க புறப்பட்ட பெரம்பலூர் பைக் ஆர்வலர். உறைபனி மலைகளை காணும் உல்லாச பயணத்திற்கு, உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர் உறவினர்கள். 

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலம் ஊராட்சி, விசுவக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ரஹமத்துல்லா (52). 9ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர், தனது 21 வயதிலேயே துபாய்க்கு வேலைக்கு சென்றார். 26 வது வயதில் திருமணம் செய்துகொண்ட ரஹமத்துல்லாவுக்கு ஒரு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். 

இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி பேரக்குழந்தையும் உள்ளனர். 2வது மகள் 10ம் வகுப்பு படித்து வருகிறார். ரஹமத் துல்லா வெளிநாட்டில் கட்டுமானப்பணி செய்தவர்.

தாத்தாவாகிவிட்ட நிலையிலும் ரஹமத்துல்லாவுக்கு அல்டிமேட் ஸ்டார் அஜீத்தை போல, பைக்கில் வெகுதூரம் பயணிப்பது அலாதிப் பிரியமாகும். 

21 வயது முதல் 45வயதுக்குள்ளாக 18 ஆண்டுகள் வெளிநாட்டிலேயே வேலை பார்த்துள்ள ரஹமத்துல்லாவுக்கு, தனது பால்ய வயது கனவு ஒன்று உள்ளது. அதாவது பனிப்பிரதேச மலைகளை பக்கத்திலிருந்து ரசிக்க வேண்டும் என்பதுதான் அது. 

ஆயுள் அரை நூற்றாண்டை கடந்துவிட்ட நிலையில், அந்த ஆசை மீண்டும் அரும்பியதால், பால்ய வயது கனவை பைக்கில் சென்று நிறைவேற்ற புதிய திட்டமும் உதித்தது. இதற்காக திருமணமான பிறகு பலமுறை இமயமலை பனிப்பிரதேசத்திற்கு செல்ல நினைத்தவருக்கு, பார்டர் என்றாலே பதற்றமான பகுதியென்ற அச்சத்தால் பல முறை தவிர்த்து வந்தார்.

 இந்நிலையில் செப்டம்பரில் இமயமலைக்கு செல்லத்திட்டமிட்டுள்ளார். இதற்கு மனைவி, மகள், அம்மா மற்றும் உறவினர்களிடம் சொல்லி விருப்பத்தை தெரிவித்துள்ளார். 

அனைவரும் சம்மதிக்கவே பைக் பயணத்திற்காக ₹1.20லட்சத்தில் 220 சிசி திறன் கொண்ட அவெஞ்சர் குரூஸ் என்ற அதிவேக, தொலை தூரப்பயணத்திற்கான புதிய பைக் ஒன்றை வாங்கி, அதில் பயணத்திற்கு ஏற்றபடி ₹40 ஆயிரத்திற்குள் எக்ஸ்ட்ரா பிட்டிங் வேலைகளை செய்துள்ளார். 

தான் செல்லும் வழித் தடங்களுக்கான மேப் வாங்கி பயண பாதையை நிர்ணயித்து கொண்டார்.

தனது பைக்கில் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்தி கொண்டார். ஆங்கிலத்தை புரிந்து கொள்ளவும், இந்தியில் சரளமாக பேசவும் தெரிந்துள்ள ரஹமத்துல்லா பயணத்துக்கு தயாரானார். சுற்றுலா பயணமாக செல்லும் இவரை இவரது மனைவி, மகள்கள் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் கடந்த 15ந்தேதி வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். 

இந்த பைக் பயணம் குறித்து ரமத்துல்லா தெரிவித்ததாவது:14ஆயிரம் கி.மீ பயணித்து பார்டரில் உள்ள பனிப்பிரதேசங்களை பக்கத்தில் நின்று பார்த்து ரசிப்பதற்காக மட்டுமே செல்லுகின்றேன். 

வேலூர் மாவட்டம் வழியாக ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் சென்று, தெலங்கானா, ஒடிசா, பீகார், மேற்குவங்கம் டார்ஜிலிங், சிக்கிம் என பயணித்து சீன எல்லையில் நின்று ரசிக்க உள்ளேன். 

பின்னர் பூடான் வழியாக யூனியன் பிரதேசங்களான அருணாச்சலப்பிரதேசம், நாகாலாந்து, மேகாலயா, மணிப்பூர், மிஜோரம், மியான்மர் பகுதிகளில் உள்ள பனிப்பிரதேசங்களை பார்த்து ரசித்தபடி பயணித்து 45 நாட்களில் சொந்த ஊர் திரும்பத்திட்டமிட்டுள்ளேன். 

40 ஆண்டுகளுக்கு முன்பு உதித்தக் கனவை 45 நாட்களில் முடிக்கத் திட்டமிட்டுள்ளேன் என்றார்.

நன்றி: தினகரன்

40 ஆண்டுகளுக்கு முன் உதித்த கனவை நிறைவேற்ற 45 நாட்களில் உறைபனி மலைகளை கண்டு ரசிக்க பைக்கில் சென்ற விசுவக்குடி கட்டிட தொழிலாளி

https://www.google.com/amp/s/m.dinakaran.com/article/News_Detail/527866/amp

செப்டம்பர் 19, 2019

தெரிந்து கொள்வோம்...
நமதூர் விசுவக்குடியில் இருந்து வடக்கு திசையை நோக்கினால் ஒரு மலை தெரியும் அல்லவா. முகமது பட்டினம், பிள்ளையார் பாளையம் வழியாக தொண்டமாந்துறை செல்லும் போது இந்த மலையை அருகில் பார்த்திருப்போம்... அருகில் பயணித்திருப்போம்.

இப்போ அதுக்கு என்னா? என்று நினைக்கிறீர்களா,

கிழக்கு, மேற்கு திசையாக நீண்டு இருக்கும் இந்த மலையினுடைய ஒரு குறிப்பிட்ட பகுதி கனிமம் மற்றும் சுரங்கதுறையின் கட்டுபாட்டிலும் மேலும் ஒருபகுதி தனிநபர் ஒருவருக்கு சொந்தமாகவும் உள்ளது. 

உண்மையாகவா? ஆம். அந்த மலையின் மேல் உள்ள முருகன் கோவிலும் அவருக்கே சொந்தமானது. 

எதிர்காலத்தில் பயன்படும் என்று நினைத்தால்  இந்த மலையில் நீங்கள் நிலம் வாங்கலாம். இந்த மலையை பற்றி இதுமட்டுமா?

இந்த மலையில் உள்ள குவாரிகள், கிரஷர்கள் ஆண்டுக்கு சுமார் 50 கோடிக்கும் அதிகமான வருவாயை ஈட்டிதருகிறதாம். இந்த மலையில் பரியாறி என்ற பெயரில் ஒரு குட்டை உள்ளதாம். இந்த குட்டையில் உள்ள நீர் வறட்சி காலங்களில் கூட வற்றாதாம்.

அருகில் உள்ள பச்சைமலை வனத்துறையின் கட்டுபாட்டில் சேர்த்த போது இந்த மலையை ஏன் சேர்க்காமல்விட்டார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை கால்நடைகளை மேய்க்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இங்குள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பார்களோ?

இதுபோல் நிறைய எழுத வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் இதுபோன்ற தகவல்களை குழுவில் உள்ளவர்கள் படிப்பார்களா? என்றுதான் தெரியவில்லை.

செப்டம்பர் 14, 2019

இந்தியா முழுவதும் மோட்டார் சைக்கிளில் சுற்றிவர வெல்டிங் பட்டறை தொழிலாளி முயற்சி
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்துள்ள விசுவக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ரஹ்மத்துல்லாஹ் (வயது 52). இவர் வெல்டிங் பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார்.

 இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவருக்கு சிறு வயதிலிருந்தே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். இதனால் இந்தியா முழுவதும் மோட்டார் சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்து பார்க்க வேண்டும் என்பது இவரது தீராத ஆசை.

 இந்நிலையில் இவர் இந்தியாவை மூன்று கட்டங்களாக சுற்றி வர திட்டமிட்டார். முதல் கட்டமாக வடகிழக்கு மாநிலங்களான ஆந்திரா, அசாம், திரிபுரா, மேகாலயா, நாகலாந்து, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களுக்கு சென்றுவர 50 நாள் பயணத் திட்டத்தை வகுத்தார்.

 பயணத்திற்குத் தேவையான கேமரா பொருத்தப்பட்ட ஹெல்மெட், கையுறை, உடல் பாதுகாப்பு கவச உடை வாங்கினார். மேலும் மோட்டார் சைக்கிளில் தான் எங்கே பயணிக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஜிபிஎஸ் கருவியையும் வாங்கி பொருத்தினார்.

 இதனைத்தொடர்ந்து நேற்று தனது மோட்டார் சைக்கிளில் பயணத்தை தொடங்கினார். அதற்கு முன்னதாக இந்த 50 நாள் பயணத்திற்கு தேவையான சமையல் பாத்திரம் மற்றும் கட்டில் போன்ற உபகரணங்களை தனது மோட்டார் சைக்கிளில் கட்டி வைத்துக் கொண்டார்.

 இந்தியா முழுவதும் சுற்றிவரும் அவரது பயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் வழியனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினத்தந்தி
செப்டம்பர்: 14, 2020



செப்டம்பர் 05, 2019

புதிய கிராம நிர்வாக அலுவலர்
நாம் வேப்பந்தட்டை வடக்கு வருவாய் கிராமத்தில் வாழ்ந்து வருகிறோம். பிரியா என்ற நமது கிராம நிர்வாக அலுவலர் (VAO) இடம் மாறுதல் காரணமாக சென்றுவிட்டார்.

தற்போது நூத்தப்பூரை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவர் வேப்பந்தட்டை வடக்கு புதிய கிராம நிர்வாக அலுவலராக (VAO) நியமிக்கப்பட்டுள்ளார்.

இனி அன்னமங்கலம் கிராமத்தின் ஒருபகுதி, விசுவக்குடி, முகமது பட்டினம், பிள்ளையார் பாளையம் மக்கள், கிராம சட்டம் ஒழுங்கு, பட்டா, சிட்டா... மற்றும் அரசின் இன்னபிற சான்றிதழ்கள் தொடர்பாக இந்த புதிய கிராம நிர்வாக அலுவலரை தொடர்புக் கொள்ளவும்.

ஆரோக்கிய சாமி
கிராம நிர்வாக அலுவலர்
+91 97512 59951