ஆகஸ்ட் 18, 2015

முஹம்மது பட்டினத்தில் பேருந்து சிறைபிடிப்பு
வேப்பந்தட்டை அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் ஊராட்சியில் அரசலூர், விசுவகுடி, முகமதுப்பட்டினம், பிள்ளையர்பாளைம் ஆகிய கிராமங்கள் உள்ளன. கடந்த 4 ஆண்டுகளாக இப்பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் இந்த சாலையை