வேப்பந்தட்டை அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் ஊராட்சியில் அரசலூர், விசுவகுடி, முகமதுப்பட்டினம், பிள்ளையர்பாளைம் ஆகிய கிராமங்கள் உள்ளன. கடந்த 4 ஆண்டுகளாக இப்பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் இந்த சாலையை