நாட்டின் 71 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26 இன்று பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், விசுவக்குடி கிராமத்தில் உள்ள முஸ்லிம்கள் பள்ளிவாசல் முன்பு தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கி குடியரசு தினத்தை கொண்டாடினர்.
விசுவக்குடி அத்-தக்வா பள்ளிவாசலின் துணை தலைவரும், அன்னமங்கலம் ஊராட்சியின் 2வது வார்டு உறுப்பினரும், தமுமுக மாவட்ட செயலாளருமான குதரத்துல்லா குடியரசு தின உரை நிகழ்த்தினார்.
தேசியக்கொடியை ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரர் Y.அப்துல் சலாம் ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் ஜமாத் நிர்வாகிகளான ஓய்வு ஆசிரியர் பொருளாளர் அமானுல்லா, தலைவர் அப்துல் ரசாக், செயலாளர் முஸ்தபா, இளைஞர்கள் என பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.




















