ஜனவரி 24, 2019

அன்னமங்கலத்தில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது: திமுக கிராமசபை கூட்டத்தில் முறையீடு
அன்னமங்கலம்,  தொண்டமாந்துறை ஊராட்சிகளில் இன்னமும் குடிநீர் பிரச்சினை  தலை விரித்தாடுகிறது என திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் பெண்கள் முறையிட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய திமுக சார்பில், அன்ன  மங்கலம், தொண்டமாந்துறை ஆகிய கிராமங்களில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடை  பெற்றது. 

வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செலாளர் நல்லதம்பி தலைமை யில் நடை  பெற்ற இந்த கூட்டங்களில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 அப்போது, அன்னமங்கலம் தொண்டமாந்துறை ஊராட்சிகளுக்கு நடுவே கல்லா ற்றின் குறுக்கே கட்டிமுடித்து 2 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் பாசனத்திற்கு ஏற்ப வரத்து  வாய்க்கால்கள் அமைக்கப்படாமல் உள்ளது.

 இதனால் அணைக் கட்டில் தண்ணீர்  நிரம்பினாலும் சுற்றிலுமுள்ள நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விட  வழி யில்லாமல் உள்ளது. 

  4கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்ட வேண்டிய வரத்து  வாய்க்கால்கள் 2கிலோ மீட்டர் நீளத்திற்குக் கூட கட்டப்பட வில்லை. கட்டிய  வரத்து வாய்க்கால்கள் தூர்ந்து போய் புதர்கள் மண்டிக் கிடக்கிறது.

 இதனால்  அணையிலிருந்து வெங்கலம் ஏரிக்கு மட்டுமே தண்ணீர் திறந்து விட முடியும்.  அருகிலுள்ள வயல்களுக்கு பயனே இல்லாமல் போய் உள்ளது. 

அன்னமங்கலம்,  தொண்டமாந்துறை ஊராட்சிகளில் இன்னமும் குடிநீர் பிரச்சி னை  தலை விரித்தாடுகிறது. 

போதுமான மருத்துவமனை வசதி இல்லாதது, பஸ் வசதி, தெரு  விளக்குகள் இல்லாதது குறித்து பொதுமக்கள் குமுறினர். 

இந்த கூட்டத்தில்  முன்னாள் திமுக அமைச்சர் கே.பி.பி.சாமி, மாவட்ட செயலாளர்  குன்னம் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்கள் கேள்விகளுக்கு பதில்  அளித்து பேசினர்.

 கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ துரைசாமி,  மாவட்ட துணை செயலாளர் பாஸ்கர்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நன்றி: தினகரன்

ஜனவரி 07, 2019

விசுவக்குடியில் அடைப்பின் காரணமாக தேங்கிய கழிவுநீர்: குடியிருப்பு வாசிகள் பாதிப்பு
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் ஊராட்சியில் விசுவக்குடி கிராமம் உள்ளது.

இங்கு தெற்கு தெருவில் வீட்டு எண் 10/91 கொண்ட ஜமால் முஹம்மது என்பவரது வீடு உள்ளது. இவரது வீட்டின் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பின் காரணமாக கழிவு நீர்  தேங்கி உள்ளது.

இதனால் துறுநாற்றம் வீசுவது மட்டுமில்லாமல் கொசுக்களும் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் ஏற்பட்டு இதனை சுற்றியுள்ள மக்கள் பாதிக்கப்படும் முன் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனவரி 05, 2019

அல் அமீன் இளைஞர் சங்க கூட்டம்: துணை நிர்வாகிகள் தேர்வு
பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் ஊராட்சியில் உள்ள விசுவக்குடியில் இன்று  (ஜனவரி 5) சனிக்கிழமை அல் அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் கூட்டம் நடைப்பெற்றது. 

அல் ஜன்னத் சமுதாய கூடத்தின் அருகில் இரவு 9 மணிக்கு நடைப்பெற்ற இக்கூட்டத்தை மன்றத்தின் தலைவர் முபாரக் அலி தலைமை ஏற்று நடத்தினார்.

முன்னாள் நிர்வாகிகள் முன்னிலையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் மன்றத்தில் உள்ள பொறுப்பாளர்களுக்கு உதவியாக துணை நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

மேலும் விசுவக்குடியில் இருந்து விசுவக்குடி அணை செல்லும் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும்.

வருகிற ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தில் நடைப்பெறும் கிராம சபை கூட்டத்தை விசுவக்குடியில் நடத்த வேண்டும், போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. 

இதில் திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மன்றத்தின் உறுப்பினர் ஹஸன் முஹம்மது  வரவேற்றார். இறுதியாக மன்றத்தின் உறுப்பினர் முஹம்மது ஜகரிய்யா நன்றி கூறினார்.
------------------------------------------------------------------------------
 தலைவர்: முபாரக் அலி
து. தலைவர்: முஹம்மது ஆசிப்
செயலாளர்: துபைல் அஹம்மது
து.செயலாளர்:  முஹம்மது ஷபீக்
பொருளாளர்: முஹம்மது அனீஸ்
இணை பொருளாளர்: நவாஸ் பாசில்