நவம்பர் 28, 2010

விசுவக்குடி பகுதிக்கு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும்  மக்கள் வலியுறுத்தல்
படங்கள், செய்திகள் : தௌ.மு.ஜகரிய்யா
       பெரம்பலூர் பிள்ளையார் பாளையத்துக்கு விசுவக்குடி வழிதடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேப்பந்தட்டை அருகே உள்ள அன்னமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட விசுவக்குடி, முகமது பட்டினம், பிள்ளையார் பாளையம் பகுதிகளில் சுமார் 4ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் தினமும் ஒரு அரசு பேருந்து மட்டுமே கடந்த 28 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகிறது. இதனால் வீட்டு தேவைக்கும், விவசாய விளைப்பொருட்களுக்கும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், மருத்துவ சுகாதார வசதிகளை பெற மற்றும் பலர்

நவம்பர் 11, 2010

விசுவக்குடி  ஏரி நிரம்பியது
விசுவக்குடியில் தொடர் மழை பெய்ததால் ஏரிநிரம்பி வழிந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வடகிழக்கு பருவமழை, தொடர்மழை காரணமாக விசுவக்குடி ஏரி 100 சதவீதம் நிரம்பியது.
விசுவக்குடியில் பகுதியில் ஏரி நிறைந்து  
கலிங்கில் நீர் வழியும் காட்சி
    தொடர்மழையால் பச்சைமலையில் உற்பத்தியாகி வரும் கல்லாற்றிலும் தண்ணீர் அதன் இருகரைகளையும் தொட்டுச் செல்கிறது. இதனால் விவசாய பணிகள் மும்முரமாக நடக்கின்றன. இடியுடன் பெய்த கனமழையில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லாற்றில் இருகரைகளையும் 
தொட்டு செல்லும் நீர்