ஆகஸ்ட் 23, 2012

விசுவக்குடியில் ரமலான் உற்சாக கொண்டாட்டம்
விசுவக்குடி ஜமாத் தலைவர் அப்துல் ஹமீத், பள்ளியின் இமாம் சுலைமான் மற்றும் இளைஞர்கள் ''இல்லாதவர்களுக்கு இயன்றதை செய்வோம்' என்ற உறுதிமொழியுடன் வாழ்த்துக்கள் கூறி புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
இஸ்லாமியர்களின் ஈகை திருநாளான ரம்ஜான் பண்டிகை கடந்த திங்கள் அன்று (20.08.2012) விசுவக்குடியில் கொண்டாடப்பட்டது. 30 நாட்கள் நோன்பிருந்தோர், நோன்பிருந்து பண்டிகையை கொண்டாடினர். இதையொட்டி விசுவக்குடி மசூதியில் சிறப்பு தொழுகை நடைப்பெற்றது. 

இதில் சிறியவர்கள், பெரியவர்கள் என சுமார் 500க்கும் மேற்ப்பட்டோர் கலந்துக் கொண்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவரை ஒருவர் கட்டி, தழுவி வாழ்த்துக்களை பறிமாறிக் கொண்டனர்.

ஆகஸ்ட் 19, 2012

அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பாராட்டு!

விசுவக்குடியில் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவியை விசுவக்குடி இணையதளம் பாராட்டுகிறது.

விசுவக்குடியில் தெரு எண் மூன்றில் வசித்து வருபவர் முஹம்மது மீரான். இவருடைய புதல்வி அனீஸ் பாத்திமா பெரம்பலூரில் உள்ள ஜோசப் பள்ளியில் ஆங்கல வழியில் பத்தாம் வகுப்பு தேர்வில் ஐநூறுக்கு 432 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

மதிப்பெண் விவரம்:

தமிழ் - 88
ஆங்கிலம் 84
கணிதம் 75
அறிவியல் 92
சமூகஅறிவியல் 93
மொத்தம் 432

இவருடைய தந்தையான மீரான் சவுதி அரேபியாவில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி – விசுவக்குடி இளைஞர்கள் குழு.

ஆகஸ்ட் 06, 2012

விசுவக்குடி இணையதளம்  உதயம்!
கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக வளைப்பூ-வாக செயல்பட்டு வந்த இந்த வளைபதிவு இணைதளமாகிறது.

நீண்ட நாட்களாக விசுவக்குடி மக்களுக்கு பொதுவாக ஓர் இணைதளம் தரவேண்டும், அதில் மக்கள் கருத்தை பதிவு செய்ய வேண்டுமென்ற எண்ணம் நெடுநாளாக இருந்தது. அதை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு ஆகஸ்டு 2ம் தேதி முதல் இணையதளமாக மாற்றம் செய்யப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
குவைத்வாழ் விசுவக்குடி ஜமாத் தலைவர் சட்டமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு

குவைத்தில் சுமார் நூற்றுக்கும் அதிகமான விசுவக்குடி மக்கள் பல்வேறு பணிகளில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் குழு அமைத்து மாதத்திற்கு ஒருமுறை சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி வருவது வழக்கம். இந்த குழுவின் தலைவராக மௌலான மீராசா  உள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 6ம் தேதி குவைத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் அரசியல் எழுச்சிக் கூட்டம் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொள்ள தமிழகத்தில் இருந்து மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களான இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்

ஆகஸ்ட் 05, 2012

விசுவக்குடி நீர்த்தேக்கத் திட்டம்: அமைச்சர் ஆய்வு

 பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் தொண்டமாந்துறை கிராமம் விசுவக்குடி ஊராட்சியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும் இடத்தை பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

 பெரம்பலூர் மாவட்டத்தின் நீராதாரத்தை பெருக்கும் வகையில் 2001 -2006 ஆம் ஆண்டு விசுவக்குடி கல்லாறு நீர்த்தேக்கம் அமைக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டார். அந்தத் திட்டம் கடந்த 5 ஆண்டுகளாக