பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்காவில் விசுவக்குடி அணை உள்ளது. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக 33 அடி கொள்ளளவு கொண்ட அணை நிரம்பியது.
இன்று டிசம்பர் 19 பெரம்பலூர் மாவட்ட சட்ட மன்ற உறுப்பினர்களான ரா. தமிழ் செல்வன் மற்றும் குன்னம் சட்ட மன்ற உறுப்பினர் டி.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் வெங்கட பிரியா முன்னிலையில் அணையை திறப்பதற்காக நிகழ்விற்கு வந்திருந்தனர்.
அப்போது அங்கிருந்த அன்னமங்கலம் கிராம மக்கள் தங்கள் ஊர் ஏரிக்கும் அணையில் இருந்து தண்ணீர் வேண்டும் என கூறி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
