ஜூன் 23, 2014

விசுவக்குடி பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க மமக ஆட்சியரிடம் மனு
திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியர் அரங்கிள் நடைப்பெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனிதநேய மக்கள் கட்சி பழுதான சாலையை சீரமைக்க வேண்டி கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் அளித்தது.

பெரம்பலூர் மாவட்டம் எசனையிலிருந்து அன்னமங்கலம் ஊராட்சி பிள்ளையார் பாளையம் வரை உள்ள தார் சாலை கடந்த பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளது.

சுமார் 8 கிலோமீட்டர் உள்ள இந்த சாலையை, பிள்ளையார் பாளையம், முகமது பட்டினம், விசுவக்குடி மற்றும் அன்னமங்கலத்தில் உள்ள சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமாக மக்கள் இந்த சாலையில் பயணம் செய்யவும்