செப்டம்பர் 24, 2022

விசுவக்குடியில் அமைக்கப்படும் புதிய சாலை பாரம் தாங்குமா?


விசுவக்குடியிலிருந்து விசுவக்வகுடி அணை செல்லும் சாலையை தார் சாலையாக அமைக்க வேண்டும் என்பது இங்குள்ள மக்களின் சுமார் 10 ஆண்டுகால கோரிக்கையாகும்.

அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு தற்போது மக்களின் வரிப்பணத்தில், சுமார் 106 லட்சம் செலவில் தார்சாலை அமைப்பதற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் நல்லதம்பி அவர்கள் தார் சாலை அமைப்பதற்கான ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இன்று மாலைக்குள் தார் சாலை அமைக்கும் பணிகள் நிறைவடையும் என தெரிகிறது. ஆனால் சாலை வெறும் 20 mm அளவிற்கு மட்டுமே போடப்பட்டு வருகிறது. இதனால் இந்த சாலை பாரம் தாங்குமா? என தெரியவில்லை.

இந்த சாலையை இன்னும் சற்று தடிமனாக அமைத்து இருந்திருக்கலாம். 



செப்டம்பர் 17, 2022

விசுவக்குடி பள்ளிவாசலுக்கு சுற்றுலா வந்த சிறுவர்கள்


பெரம்பலூரில் உள்ள ஆதவ் பப்ளிக் பள்ளி சிறுவர்கள் இன்று சனிக்கிழமை விசுவக்வகுடி அணைக்கு கல்வி சுற்றுலா வந்தனர்.

பின்னர் அருகில் உள்ள வழிபாட்டு தளமான விசுவக்வகுடி தக்வா பள்ளிவாசலுக்கும் அழைத்து வரப்பட்டனர்.  வழிப்பாட்டு தளம் என்றால் உருவமும், கற்சிலைகளும் என பார்த்து பழகிய அவர்கள் பள்ளிவாசலில் உருவம் இல்லாமல், சிலைகள் இல்லாமல் இருந்ததை கண்டு வியந்தனர்.

மேலும் பள்ளிவாசலில் அமர்ந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மனதை ஒருநிலைப்படுத்தும் விதமாக தியானத்தில் ஈடுபட்டனர்.

தியானத்திற்குப் பிறகு பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாக முஸ்லிம்களின் இறைவேதம் திருக்குர்ஆன் என்றும், அதில் முதன் முதலில் இறக்கப்பட்ட திருகுர்ஆன் வசனம் படிப்பீராக... ஓதுவீராக... என்பதுதான். எனவே மாணவர்கள் நல்ல முறையில் படித்து வாழ்க்கையில் உயர வேண்டும் என விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போது பள்ளிவாசல் நிர்வாகத்தின் தலைவர் இப்றாகீம் அவர்கள் மற்றும் அல் அமீன் சங்க இளைஞர்கள் உடன் இருந்தனர்.

பின்னர் பள்ளி சிறுவர், சிறுமியர்கள் மகிழ்ச்சியாக திரும்பி சென்றனர். 

video 👇


video 👆




புது பொலிவுடன் விசுவக்குடி ரேஷன் கடை


விசுவக்குடி பள்ளிவாசல் அருகே ரேசன் கடை இயங்கி வருகிறது. பல ஆண்டுகளாக அதன் வர்ணம் மங்கி, கலையிழந்து அசுத்தமாக காணப்பட்டு வந்தது.

தற்போது ரேஷன் கடையை சீரமைக்கும் விதமாக புதிய வர்ணம் பூசப்பட்டு புது பொலிவுடன் காட்சி தருகிறது.