ஆகஸ்ட் 20, 2010

விசுக்குடியில் எரிவாயு இணைப்பு வழங்கும் விழா
பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் ஊராட்சி விசுவக்குடியில் 17ம் தேதி தமிழக அரசின் இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

 மாவட்ட வருவாய் அலுவலர் (டிஆர்ஓ) பழனிசாமி பயனாளிகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கினார். இதில் வேப்பந்தட்டை வட்ட தாசில்தார், ஒன்றிய செயலாளர் மகாதேவி ஜெயபால், கிராம நிர்வாக அலுவலர், வார்டு உறுப்பினர்கள்  மற்றும் விசுவக்குடியில் உள்ள மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

 இதில்  ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் வரவேற்றார். வேப்பந்தட்டை வட்ட வழங்கல் அலுவலர் நன்றி கூறினார்.

ஆகஸ்ட் 14, 2010

விசுவக்குடி - புதிய நிர்வாகிகள் தேர்வு
A.Aamanulla
      பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடி பள்ளிவாசலில்  ஜமாத் சார்பில் 10.08.2010 அன்று பள்ளிவாசல் நிர்வாக பொதுக்குழுக் கூட்டம் நடைப்பெற்றது. இதற்கு ஜமாத் தலைவர் ஷேக் அப்துல் ஹமீது தலைமை தாங்கினார். துணைத்தலைவர் காதர்அலி, மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

புதிய பள்ளிவாசல் கட்டுதல், கிராம முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல் போன்ற குறிப்பிட்ட பணியை நோக்கமாக கொண்டு வேலை செய்யும் புதிய நிர்வாககுழு ஏற்படுத்துவதாக முடிவு செய்யப்பட்டது. பின்னர் தேர்தல் நடைப்பெற்றது. அதில்