ஜூன் 28, 2022

கல்லாற்றில் இருந்து விசுவக்குடி ஏரிக்கு நீர் வருவது தொடர்பாக பொதுப்பணி துறையின் பதில்


கல்லாற்றில் மண்ணரிப்பின் காரணமாக விசுவக்குடி பகுதிக்கு கல்லாற்று நீர் வருவதில்லை. எனவே பொதுப்பணித்துறை கல்லாற்று நீரை பாரபட்சமில்லாமல் பகிர்ந்து அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பி இருந்தோம்.

தற்போது மண்ணரிப்பு ஏற்பட்ட இடத்தில் ஜேசிபி இயந்திரம் கொண்டு மண் பரப்பப்பட்டுள்ளது. இது இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுதானா? என்பது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மனசாட்சிக்கு தெரியும். 

குறிப்பு: இது தொடர்பான வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது.



ஜூன் 21, 2022

மின்தடை அறிவிப்பு


இன்று செவ்வாய் கிழமை (21.06.2022) கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைப்பெற இருப்பதால் விசுவக்குடி, முகமது பட்டிணம், பிள்ளையார் பாளையம், அன்னமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது. எனவே மின்வசதி தொடர்பான பணிகளை முன் கூட்டியே செய்து முடித்துக் கொள்ளவும்.