மே 16, 2022

விசுவக்குடியிலுள்ள பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு


பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். 

இதில் வேப்பந்தட்டை தாலுகா விசுவக்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், விசுவக்குடி நீர்த்தேக்கத்தில் இருந்து பாசன கால்வாய்கள் அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. 

ஆனால் பொதுப்பணித்துறையோ பாசன கால்வாய்கள் அமைக்கப்பட்டு விட்டது என்று கூறுகிறது. இதனால் பாசன கால்வாய்கள் அமைப்பதில் முறைகேடு நடந்துள்ளதாக தெரிகிறது. எனவே கலெக்டர் உரிய விசாரணை நடத்தி விவசாயிகள் பயன்பெறும் வகையில் முழுமையாக பாசன கால்வாய்கள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள விசுவக்குடி நீர்தேக்கத்தில் தற்போது உபரி நீர் கல்லாற்றின் வழியாக வெங்கனூர் ஏரிக்கு மட்டும் செல்கிறது. விசுவக்குடி அருகே கல்லாற்றில் இருந்து நீர்பிரிந்து ஓடையாக விசுவக்குடி, அன்னமங்கலம், வேப்பந்தட்டை சென்று, அங்கிருந்து வேத நதியாக பாலையூர், தொண்டாபாடி, நெய்குப்பை வழியாக சின்னாறு நீர்த்தேக்கத்திற்கு செல்வது வழக்கம். 

விசுவக்குடி யில் இருந்து மனு கொடுக்க வந்தவர்கள்

ஆனால் தற்போது கல்லாற்று நீர் வெங்கலம் ஏரிக்கு மட்டும் செல்கிறது. கல்லாற்றின் கிளை ஓடை பொதுப்பணித்துறை பராமரிப்பு செய்யாத காரணத்தால் நீர் வரத்து இன்றி வறண்டு கிடக்கிறது. இதனால் அந்தப்பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்படுகிறது. 

எனவே பாரபட்சம் காட்டாமல் கல்லாற்று நீரை ஒருதலைபட்சமாக இல்லாமல் முறையாக பகிர்ந்து அளிக்க கிளை ஓடையை தூர்வாரி, அந்த ஓடையில் கல்லாற்று நீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் விசுவக்குடி கிராமத்தில் இருந்து சுற்றுலாத்தலமான விசுவக்குடி நீர்த்தேக்கத்திற்கு சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் செல்லும் சாலை தற்போது ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. எனவே அந்த சாலையை தார் சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விசுவக்குடியில் ஊரக வளர்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி கட்டுமானத்தில் உள்ள விரிசலை மழைக்காலம் வருமுன் சரி செய்ய வேண்டும், என்று அதில் கூறியிருந்தனர்.

மே 04, 2022

விசுவக்குடியில் நெற்பயிர்கள் சாக்கடை நீரில் அடித்துச் சென்று நாசம் (video...)


விசுவக்குடி பள்ளிவாசல் தெருவில் உள்ள விவசாயிகள் தங்கள் வயலில் விளைந்த நெற்பயிர்களை உலர்ந்துவதற்காக காய வைக்கப்படுவது வழக்கம்.

திடீரென இன்று இரவு 7 மணி முதல் சுமார் ஒரு மணி நேரமாக கனமழை பெய்தது.  

ஊராட்சி நிர்வாகத்தால் பலமுறை  சாக்கடையை தூர்வாரி சுத்தம் செய்ய கோரியும் சுத்தம் செய்யாததால் பள்ளிவாசல் தெருவில் காய வைக்கப்பட்டு இருந்த சாதிக் என்பவருக்கு சொந்தமான நெல் பயிர்கள் அடைப்பின் காரணமாக தெருவில் சாக்கடை கலந்த மழை நீரில் நனைந்து அடித்துச் செல்லப்பட்டு வீணானது என வேதனை தெரிவித்தார்.

பின்னர் அவரே சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை தற்காலிகமாக இரவு என்று பாராமலும், மின்தடை என்று கூட பார்க்காமலும் தற்காலிகமாக அவரே அடைப்பை சரி செய்தார்.

எனவே அன்னமங்கலம் ஊராட்சி நிர்வாகம் விசுவக்குடியில் உள்ள தூர்வாரப்படாத சாக்கடையை உடனடியாக தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 









மே 02, 2022

விசுவக்குடியில் ரமலான் பெருநாள் தொழுகை எங்கு எப்போது நடைபெறும்?

ஜமாஅத் அறிவிப்பு

விசுக்குடியில் நாளை (Tue, 3 May) செவ்வாய்க்கிழமை மிக சரியாக காலை 7 மணியளவில் அத்தக்வவா ஜும்மா பள்ளிவாசலில் ரமலான் பெருநாள் தொழுகை நடைபெறும் என ஜமாத் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. (இன்ஷாஅல்லாஹ்...) 


மேலும் V POST ன் சார்பாக இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்