பாலூர் ஊரின் அறிவிப்பு பலகையை கண்டவுடன் எனது இறுக்கையை விட்டு எழுந்து படிக்கட்டுக்கு அருகில் சென்றேன்.
பயணித்துக் கொண்டிருந்த பேருந்தின் கம்பியில் சாய்ந்து நின்று கொண்டிருந்த நடத்துனர் என்னைப பார்த்து தனது புருவங்களை மேலே உயர்த்தி விழிகளை மட்டும் பேருந்துக்கு வெளியே நகர்த்தி தலையை லேசாக ஆட்டினார்.இங்கே இறங்கப் போகிறீர்களா என்று அர்த்தமாம்.
நானும் தலையை மேலிருந்து கீழாக ஒருமுறை ஆட்டினேன். சினேகப் புன்னகையுடன் விசிலை வாயில் வைத்து ஊதிவிட்டு
'பாலூர் ஆலமரம் எல்லாம் இறங்குங்க'
'பாலூர் ஆலமரம் எல்லாம் இறங்குங்க'