ஜனவரி 22, 2023

புதிய மின் மாற்றி மக்களின் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?


விசுவக்குடி 4வது வீதியில் உள்ள வீடுகளில் குறைந்த மின்னழுத்த குறைபாடு தற்போது வரை ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. 

இதனால் பாதிக்கப்பட்ட கிராம பொதுமக்கள் கடந்த ஜூலை 23ஆம் தேதி சனிக்கிழமை காலை திடீரென பேருந்து மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மின்சார வாரிய ஊழியர்கள் இந்த பிரச்சனையை சரி செய்யும் விதமாக புதிய மின் மாற்றி அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்தனர்.

அப்போது பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக புதிய மின்மாற்றி அமைக்க மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது.

(புகார் பதிவு எண்: Petition No 2022/9005/16/394445/072)

கடந்த ஆறு மாதம் ஆன நிலையில் தற்போது தான் தாமதமாக புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

இது மக்களின் பயன்பாட்டிற்கு எப்போது  அர்ப்பணிக்கப்படும் என தெரியவில்லை?

எனவே விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு புதிய மின்மாற்றியை அர்ப்பணிக்குமாறு பொதுமக்களின் சார்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

ஜனவரி 21, 2023

விசுவக்குடியில் தொல்லை செய்த குரங்குகள் - கூண்டு வைத்து பிடித்த வனத்துறை


விசுவக்குடியில் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை குரங்குகள் தொடர்ந்து அச்சுறுத்தி வந்தன. 

இதனால் குரங்குகளை பிடித்து சரணாலயத்தில் விட வேண்டுமென விசுவக்குடி பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து வேப்பந்தட்டை வனத்துறையின் சார்பில் விசுவக்குடியில் உள்ள சுமார் 80-க்கும் மேற்பட்ட குரங்குகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டு ஆத்தூர் அருகே உள்ள முட்டல் வனப்பகுதியில் விடப்பட்டது.

நன்றி 🙏

•வனப் பாதுகாவலர் வெங்கடேஷ்

•ராஜா முஹம்மது 

•ஷெரிஃப் 

•ஜாபர் அலி 

•ராஜேந்திரன்

மற்றும் ஒத்துழைப்பு வழங்கி உதவியவர்கள்...

Video👇



ஜனவரி 05, 2023

விசுவக்குடியில் புதிய சாலை ஆய்வு

 

விசுவக்குடி மற்றும் முகமது பட்டினத்தில் ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தில் (TNRRIS) அமைக்கப்பட்ட சாலைகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையர் தாரேஷ் அகமது (ஜனவரி 05) இன்று ஆய்வு செய்தார்.

Video 👇