ஜனவரி 30, 2013

விசுவக்குடி ஜமாத் தலைவர் இயற்கை எய்தினார்
 விசுவக்குடியின் ஜமாத் தலைவர் ஷேக் அப்துல் ஹமீத் அவர்கள் இறந்த செய்தி அறிந்து விசுவக்குடி மக்கள் பேரதிர்ச்சியும், வேதனையும்,  துயரும் அடைந்துள்ளனர்.

கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த விசுவக்குடி ஜமாத் தலைவர் ஷேக் அப்துல் ஹமீது அவர்கள் சிகிச்கைகாக பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருந்தார்.

இன்று (29.01.2013) இரவு இந்திய நேரப்படி 7:30 மணியவில் சிகிச்சை பலனின்றி

ஜனவரி 28, 2013

விசுவக்குடியில் முப்பெரும் விழா

விசுவக்குடியின் ஜமாத் நிர்வாகிகள் வருகிற பிப்ரவரி 3ம் தேதி அல்-ஜன்னத் சமுதாய நலக்கூடம் திறப்பு விழாவில் மீலாது நபி விழாவும், கந்தூரி விருந்தும் நடைப்பெறும் எனவும், கந்தூரி விருந்தினை விசுவக்குடியின் அல்-அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் வாலிபர்கள் உணவு பரிமாறி உபசரிப்பார்கள் என அறிவித்தனர்.

இந்த முப்பெரும் விழாவிற்கு அனைவரும் திரளாக வந்து கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஊரில் வசிப்பவர்களுக்கும், வெளியுரில் வசிப்பவர்களுக்கும் துண்டு பிரசுரங்கள் வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த புதிய அல்-ஜன்னத் சமுதாய நலக்கூடத்தில் நடைப்பெறும் முதல் நிகழ்வு மிலாத் நபி விழா என்பது குறிப்பிடதக்கது.


அல்-ஜன்னத் சமுதாய நலக்கூடம் உருவான விதம்!
சமுதாய நலக்கூடம் ஏற்படுத்துதல், புதிய பள்ளிவாசல் கட்டுதல், கிராம முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல் போன்ற குறிப்பிட்ட பணியை நோக்கமாக கொண்டு வேலை செய்யும் நிர்வாககுழு  ஓய்வு ஆசிரியர் அமானுல்லா அவர்களின் தலைமையில் 10.08.2010 அன்று அமைக்கப்படுகிறது.

18.09.2010 ஒரு மாதமே ஆன நிலையில் நிர்வாகக்குழு நிர்வாகிகளை மாற்றம் செய்யப்பட்டு புதிய தலைவராக முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் அப்துல் ஹக் என்பவர் நியமிக்கப்பட்டார். பள்ளிவாசல் அருகில் உள்ள பழைய பழுதடைந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு,

ஜனவரி 26, 2013

விசுவக்குடி - சமுதாய நலக்கூடம் திறப்பு விழா அழைப்பிதழ்:
பக்கம்:4-1 படத்தை பெரியதாக காண படத்தின் மீது சொடுக்கவும்

பக்கம்:2-3 படத்தை பெரியதாக காண படத்தின் மீது சொடுக்கவும்
விசுவக்குடியில் இல்லறத்தின் நுழைவாயில் தயார்.............

படங்கள்: ச.முகமது யாசீன், குதரத்துல்லா செய்தி உதவி: அக்பர் அலி குவைத்