பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்காவில் விசுவக்குடி அணை உள்ளது. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக 33 அடி கொள்ளளவு கொண்ட அணை நிரம்பியது.
இன்று டிசம்பர் 19 பெரம்பலூர் மாவட்ட சட்ட மன்ற உறுப்பினர்களான ரா. தமிழ் செல்வன் மற்றும் குன்னம் சட்ட மன்ற உறுப்பினர் டி.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் வெங்கட பிரியா முன்னிலையில் அணையை திறப்பதற்காக நிகழ்வில் கலந்து கொண்டு அணை நீரை திறந்து வைத்தனர்.