பெரம்பலூர் மாவட்டம், விசுவக்குடியில் ஈகை திருநாளான ரம்ஜான் பண்டிகை இன்று திங்கள் கிழமை (26.06.2017) கொண்டாடப்பட்டது. இதையொட்டி விசுவக்குடி அத்தக்வா பள்ளிவாசலில் காலை 9 மணிக்கு சிறப்பு தொழுகை நடைப்பெற்றது.
29 நாட்கள் தராவிஹ் தொழுகையை நடத்திவந்த ஹாபிள் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் தொழுகை நடைப்பெற்றது. அதன் பிறகு பள்ளியின் இமாம் மௌலான முஹம்மது சுலைமான் அவர்கள் குத்பா எனும் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
இதில் சிறியவர்கள், பெரியவர்கள் என சுமார் 1000க்கும் மேற்ப்பட்டோர் கலந்துக் கொண்டனர். தொழுகை முடிந்ததும் இனிப்புகள் வழங்கியும், ஒருவரை ஒருவர் கட்டி, தழுவியும் வாழ்த்துக்களை பறிமாறிக் கொண்டனர்.




