பெரம்பலூர் பொதுப்பணித்துறை SDO (SUB DIVISION OFFICER) பிரபாகரன் விசுவக்குடி அணைக்கட்டை தற்போது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விசுவக்குடி அணை நீர் பயன்பாட்டிற்கு எப்போது திறக்கப்படும் என கேட்டதற்கு,
நேற்று இரவு முதல் பச்சை மலை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. விசுவக்குடி அணைக்கு கல்லாற்றிலிருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
33 அடி கொள்ளளவு கொண்ட விசுவக்குடி அணையின் நீர்மட்டம் தற்போது 29 அடியாக உள்ளது. அணையின் முழு கொள்ளளவான 33 அடியை எட்டிய பிறகே அணை திறக்கப்படும் என தெரிவித்தார்.
அப்போது AE நல்லுசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குதரத்துல்லா, 2-வது வார்டு உறுப்பினர் வதூத் ஆகியோர் உடனிருந்தனர்.
V POST
