செப்டம்பர் 20, 2012

கல்வி தீபம் ஏற்றிய மௌலானா முஹம்மது பின் அலவி

பிறப்பு:

தோன்றின் புகழோடு தோன்றுக என்பர். நம் மௌலானா அவர்கள் அதற்கு இலக்கணமாகத் தோன்றினார்கள். இந்தியத் திருநாட்டின் தென்மேற்கு மாநிலமான கேரள மாநிலத்தில் மலப்புரம் மாவட்டம் மன்னார்காடு தாலுக்கா வெட்டத்தூர் என்ற அழகிய மலைகள் சூழ் கிராமத்தில் 1896-ஆம் ஆண்டு மிக ஏழ்மையான குடும்பத்தில் அலவி, பாத்திமா பீவி தம்பதியருக்கு மகனாக பிறந்தார். முஹம்மது குடும்பத்தின் முதல் குழந்தையான இவருக்கு ஜெய்னுலாப்தீன் என்ற தம்பியும் உம்மாத்தம்மாள் என்ற தங்கையும் உடன் பிறந்தவர்கள்  ஆவர். இவர்களின் குடும்பத்தை 'காராடன் குடும்பம்' என்று அப்பகுதி மக்கள் அழைத்து வந்தனர்.

இளமை காலம்:

வறுமை தலை விரித்தாடிய இவரது இளமை பருவத்தின் ஆரம்பத்திலேயே தந்தையை இழந்துவிடுகிறார். தாயார் பாத்திமாபீவி அரவணைப்பில் வளர்ந்த மௌலானா அவர்கள் குடும்பத்தின் பொருளாதார தேவையை கருதி பள்ளி

செப்டம்பர் 12, 2012

இஸ்லாத்தை ஏற்ற ராஜ்குமார்
பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடியில் விவசாயம் செய்து வருபவர்கள் தான் இராமர் மற்றும்  இராஜம்மாள் தம்பதி. அவர்களின் இரண்டு மகன்களின் ஒருவர் தான் ராஜ்குமார். கடந்த ஐந்து வருடமாக குவைத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் தன் வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு முகமது யூசூப் என பெயர் மாற்றிக் கொண்டார்.