பிப்ரவரி 28, 2021

கடன் கொடுக்க ஆணை வழங்கியும், தொகை கொடுக்காமல் அலைகழிப்பு

 


பெரம்பலூர் மாவட்டம், அன்னமங்கலம் ஊராட்சியை சேர்ந்த 6 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்குவதற்கான ஆணையை வழங்கி விட்டு கடன் வழங்காமல் அளிப்பதாகவும், உடனடியாக கடன் தொகையை வழங்க கோரியும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் ஊராட்சியில் 6 மகளிர் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவர்களுக்கு கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி திருச்சியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சரால் உத்தரவிடப்பட்டு கடன் வழங்குவதற்கான ஆணையும் குழுவினருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அதனை யடுத்து அந்தக் குழுவினர் அன்னமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு சென்ற கடன் தொகையை கேட்டுள்ளனர். அதற்கு வங்கியில் அலுவலர்கள் சரியான விளக்கம் அளிக்காமல் அவர்களை அலைக்கழித்து இதுவரை கடன் தொகையை வழங்கவில்லை. 

இதனால் வேதனை அடைந்த அந்த மகளிர் குழுவினர் உடனே கடன் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.

நன்றி: தினகரன் நாளிதழ்



பிப்ரவரி 26, 2021

புதிய தார் சாலை அமைக்கும் பணி. இறை வணக்கத்துடன் ஆரம்பமானது

 


விசுவக்குடி கிராம மக்களின் பல ஆண்டுகால கோரிக்கை வெற்றி பெற்றது. விசுவக்குடியிலிருந்து விசுவக்குடி அணை செல்லும் பாதை தார் சாலையாக அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் இறை வணக்கத்துடன் இன்று (26.02.2021) வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. (எல்லா புகழும் இறைவனுக்கே)

விசுவக்குடியிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் மாவட்டத்தின் சுற்றுலா தளங்களில் ஒன்றான விசுவக்குடி அணை உள்ளது. 

இந்த அணை செல்லும் சாலையை பயன்படுத்தி தினமும் அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றது.

இதில் முதல் 2 கிலோ மீட்டர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மெட்டல் சாலையாக அமைக்கப்பட்டது. 

சாலையில் உள்ள மண் கரைந்து ஜல்லிகற்கள் தனியாக பெயர்ந்து கரடு முரடாக போக்குவரத்திற்கு லாயக்கி அற்றதாக மாறியுள்ளது.

மேலும் வெயில் காலங்களில் புழுதியும், மழை காலங்களில் சேறும் சகதியாக மாறிவிடுகிறது. இதனால் விளை நிலங்களுக்கு செல்லும் விவசாயிகள், தொண்டமாந்துறை, அரும்பாவூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள், விசுவக்குடி அணை செல்லும் சுற்றுலா வாசிகள் என இந்த சாலையை பயன்படுத்தும் அனைத்து தரப்பினரும் கடும் அவதியடைந்து வந்தனர். 

எனவே தமிழக அரசு விசுவக்குடியில் இருந்து விசுவக்குடி அணை செல்லும் மெட்டல் சாலையை தார் சாலையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக விசுவக்குடி கிராம மக்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை எழுப்பி வந்தனர்.

தற்போது அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, சுமார் 90 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி இன்று மதியம் வெள்ளி கிழமை 12:30 மணியளவில் இறை வணக்கத்துடன் ஆரம்பமானது. இந்த சாலைகான ஒப்பந்தம் சேலம் RK கன்ஸ்ட்ரக்ஸன் பெற்றுள்ளது. இதன் உரிமையாளர் வெற்றிவேல் M.A., M.Ed.,M.Phil., இந்த நிகழ்வில் விசுவக்குடி ஜமாத் நிர்வாகிகள், அத்தக்வா பள்ளிவாசல் இமாம், ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஊர் மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தேர்தல் நேரம் என்பதால் அவசரகதியில் இல்லாமல் தரமாக அமைக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.











பிப்ரவரி 15, 2021

விசுவக்குடியில் நாளை மின்தடை


நாளை செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 16) கிருஷ்ணாபுரம் துணைமின் நிலைய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் பணிகள் முடியும் வரை விசுவக்குடியில் மின் விநியோகம் இருக்காது என கிருஷ்ணாபுரம் உதவி செயற்பொறியாளர் கலியமூர்த்தி அறிவித்துள்ளார். எனவே நமதூர் விசுவக்குடி மக்கள் மின் வசதி தொடர்பான பணிகளை முன் கூட்டியே செய்து கொள்ளவும். 

தகவல் அறிவிப்பு: முகமது ஷபீக்

பிப்ரவரி 02, 2021

அரசலூர் ஏரி உடைந்தது போல் ஆபத்து விசுவக்குடி ஏரி விரிசலை உடனே சீரமைக்க வேண்டும்: சமூக ஆர்வலர் வேண்டுகோள்

 




பெரம்பலூர்: அரசலூர் ஏரி உடைந்தது போல் உடையும் அபாயத்தில் விசுவக்குடி ஏரி. விரிசலை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பெரம்பலூர்  கலெக்டரிடம் விசுவக்குடி சமூக ஆர்வலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் வேப் பந்தட்டை தாலுகா, அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது விசுவக்குடி கிராமம். இவ்வூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த  சமூக ஆர்வலரான முகமது ஜக்கரியா என்பவர் நேற்று பெரம்பலூர் கலெக்டரிடம் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது :

விசுவக்குடி ஊராட்சி பகுதியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் அருகே ஏரி ஒன்று உள்ளது. தற்போது பெய்த மழையின் காரணமாக இந்த ஏரி  நிரம்பி உள்ளது.

இந்த ஏரியை சுற்றியுள்ள விளை நிலங்களுக்கும் கிணறுகளுக்கும் நீராதரமாக இந்த ஏரியாக உள்ளது. தற்போது இந்த ஏரியின் உபரி  நீர் வெளியேற்றப்படும் கடகால் எனப்படும் கான்கிரீட் கட்டுமானத்தில் மிகப்பெரிய விரிசல் காணப்படுகிறது. ஒன்றரை மீட்டர் நீளமுள்ள இந்த விரிசல்  அதன் கட்டுமானத்திற்கு ஆபத்தை ஏற்படுத் தும் விதமாகவே உள்ளது.இதன் காரணமாக அரசலூர் ஏரி உடைந்து 170 ஏக்கர் விலை நிலங்கள் நாசமானது போல இப்பகுதியிலும் அசம்பாவிதம் ஏதும் நேராமல், முன்கூட்டியே  திட் டமிட்டு மக்களையும் விளை நிலங்களையும் காப்பாற்றத் துரித நடவடிக்கை எடுத்து பொதுப்பணித்துறை மூலம் விரிசலை சரி செய்து, ஏரி நீரை  பாதுகாக்க விரைந்து உத்தரவு இட வேண்டும் என விசுவக்குடி கிராம பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறுப்பட்டுள்ளது.

https://www.facebook.com/107459262625549/posts/3918641804840590/

https://www.google.com/amp/s/m.dinakaran.com/article/News_Detail/651599/amp







பிப்ரவரி 01, 2021

அரசலூர் ஏரி உடைப்பு எதிரொலி. அதிகாரிகள் இடமாற்றம்?



பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா தாசில்தாராக இருந்த கிருஷ்ணராஜ் குன்னம் தாலுக்கா விற்கு இடமாற்றம். ஆலத்தூர் தாலுக்காவில் இருந்த  பாலசுப்பிரமணியம் என்பவர் வேப்பந்தட்டை தாலுக்காவின் புதிய தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) இமயவர்மனும் இடமாற்றம். அதற்கு பதிலாக முரளி என்பவர் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளார்.