கடந்த சில தினங்களாக திருட்டு சம்பவங்கள் நடைபெற முயன்றதாக கிராம மக்கள் சார்பாக அரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் தெரிவித்திருப்பதாவது...
விசுவக்குடி கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாக தினசரி திருடர்கள் பிரச்சனை அதிகமாக உள்ளது.
கிட்டத்தட்ட இரவு இரண்டு மணி முதல் 4 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் ஆங்காங்கே ஒரு சில வீட்டில் கதவுகளை உடைக்க முயற்சித்த போது வீட்டில் உள்ளவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு திருடர்கள் ஓடி விடுகின்றனர். இவர்கள் மூன்று பேர் என தெரியவுள்ளது.
மேலும் 24/7/ அன்று ஓர் வீட்டின் கதவை உடைக்க முற்பட்டபோது ஊர் இளைஞர்கள் விரட்டி பிடிக்க முயன்ற போது இருட்டில் ஓடி விட்டார்கள்.
பின்பு தினசரி இதே பிரச்சனையில் உள்ளபடியால் ஊர் மக்கள் நிம்மதியின்றி, உறக்கமின்றி பயத்துடன் வாழ்கின்றோம். ஐயா அவர்கள் தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.



