ஜூலை 28, 2022

விசுவக்குடியில் திருட்டு பயம் அரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார்


பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் விசுவக்குடி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 2000க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். 

கடந்த சில தினங்களாக திருட்டு சம்பவங்கள் நடைபெற முயன்றதாக கிராம மக்கள் சார்பாக அரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் தெரிவித்திருப்பதாவது...

விசுவக்குடி கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாக தினசரி திருடர்கள் பிரச்சனை அதிகமாக உள்ளது.

கிட்டத்தட்ட இரவு இரண்டு மணி முதல் 4 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் ஆங்காங்கே ஒரு சில வீட்டில் கதவுகளை உடைக்க முயற்சித்த போது வீட்டில் உள்ளவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு திருடர்கள் ஓடி விடுகின்றனர். இவர்கள் மூன்று பேர் என தெரியவுள்ளது. 

மேலும் 24/7/ அன்று ஓர் வீட்டின் கதவை உடைக்க முற்பட்டபோது ஊர் இளைஞர்கள் விரட்டி பிடிக்க முயன்ற போது இருட்டில் ஓடி விட்டார்கள்.

பின்பு தினசரி இதே பிரச்சனையில் உள்ளபடியால் ஊர் மக்கள் நிம்மதியின்றி, உறக்கமின்றி பயத்துடன் வாழ்கின்றோம். ஐயா அவர்கள் தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

ஜூலை 23, 2022

தெருவிளக்கு மற்றும் சாக்கடை வசதியுடன் சாலை அமைத்து தர மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் ஊராட்சியில் விசுவக்குடி கிராமம் உள்ளது. இங்குள்ள ஊராட்சி வார்டு எண் 2ல் பள்ளிவாசல் அருகே அல் ஜன்னத் சமுதாய நலக்கூடம் உள்ளது.

இந்த சமுதாய நலக்கூடத்தில் இருந்து மேற்கு திசை நோக்கி செல்லும் தெருவில் சுமார் 15க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது.

இதுவரை இத்தெருவில் ஒரு தெருவிளக்கு கூட அமைக்கப்படாததால் இப்பகுதியில் வசித்து வருபவர்கள் பல சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். 

பணி முடிந்து இரவு வீட்டிற்கு செல்பவர்களும், தொழுகையை நிறைவேற்ற பள்ளிவாசல் சென்று வருபவர்களும், டியூஷன் சென்று வரும் மாணவ, மாணவிகளும் மற்றும் இன்னபிற வேலை நிமித்தமாக வெளியில் சென்று வருபவர்களும் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

இதனால் இரவு நேரங்களில் சிறுவர்கள் வீட்டைவிட்டு வெளியில் வருவதற்கு கூட பயப்படுகின்றனர். தனியாக செல்லும் பெண்களிடம் வழிமறித்து பணம், நகை உள்ளிட்டவற்றை பறித்து செல்லும் வாய்ப்பும் உள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த தெருவில் சாலை வசதி இல்லாமல் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மண் பாதையாக இருப்பதால் மழைக்காலங்களில் சேரும் சகதியுமாக நடந்து செல்ல சிரமப்பட வேண்டிய நிலை காணப்படுகிறது. இதனால் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பார்கள் வழுக்கி விழுந்து அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.

மேலும் சாக்கடை வசதி இல்லாத காரணத்தால் தண்ணிர் தேங்கி தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.

ஆகையால் தயவுகூர்ந்து தெருவிளக்கு மற்றும் சாக்கடை வசதியுடன் சாலை அமைத்து தருமாறு தாழ்மையுடன் கிராம மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

மனு எண் :

தங்களுடைய மனு எண்2022/9005/16/394441/0723 பெறப்பட்டது. தங்கள் மனுவின் நிலையை https://gdp.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் - தமிழ்நாடு மின்ஆளுமை முகமை. 

விசுவக்குடியில் குறைந்த மின்னழுத்தம் - புதிய மின்மாற்றி அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே விசுவக்குடி கிராமம் உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 

இங்குள்ள மின்மாற்றியில் குறைந்த மின்னழுத்தத்தின் காரணமாக 220 வோல்ட் மின்சாரத்திற்கு பதில் மிகக் குறைந்த அளவாக சுமார் 150 வோல்ட் மின்சாரம் சப்ளை ஆவதால் போதிய அளவு மின்சாரம் இன்றி இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதனால் வீடுகளில் உள்ள மின்விளக்கு, மின்விசிறி, டி.வி மற்றும் குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட மின்சாதன பொருட்களை இயக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக மின்சாதன பொருட்கள் பழுதாகி வருகின்றன.

மேலும், குறைந்த மின்னழுத்தத்தால் இந்தபகுதி பொதுமக்கள் சமையலுக்கு மாவு அரைத்தல், வீட்டு ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தொட்டிகளில் நீர் நிரப்புதல், வாசிங் மெசின்களில் துணி துவைத்தல்... போன்ற தங்களது அன்றாட பணிகளை விரைந்து முடிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். தற்போது வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மின் விசிறியை இயக்க முடியாததால் முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் உள்ளிட்ட அனைவரும் வியர்வையாலும், கொசு கடியாலும் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே விசுவக்குடி கிராமத்தில் கூடுதலாக இன்னொரு புதிய மின்மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

Your Petition No 2022/9005/16/394445/0723 is received. URL to check the status: https://gdp.tn.gov.in - Tamil Nadu e-Governance Agency. 

விசுவக்குடியில் பஸ் மறியல்


தொடர் மின்வெட்டு, குறைந்த மின்னழுத்தம், முறையாக குடிநீர் சப்ளை செய்யாதது, மூன்றாவது வீதியில் உடைந்த பாலத்தை சீர் செய்யாதது... போன்ற பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கக்கோரி விசுவக்குடி பேருந்து நிறுத்தத்தில் இன்று காலை 8:30 மணி முதல் 10 மணி வரை பஸ் மறியல் போராட்டம் நடைபெற்றது.

பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பஸ் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

ஜூலை 15, 2022

விசுவக்குடியில் நன்றி தெரிவித்த எம்எல்ஏ (video...)

 

தன்னை வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு  ஜூலை 15ஆம் தேதி காலை இன்று பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் விசுவக்குடியில் நன்றி தெரிவித்தார்.



விசுவக்குடியில் திடீரென  எம் எல் ஏ வை சூழ்ந்துகொண்ட  மக்கள்


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் ஊராட்சியில் விசுவக்குடி கிராமம் உள்ளது. இங்குள்ள ஊராட்சி வார்டு எண் 2ல் பள்ளிவாசல் அருகே அல் ஜன்னத் சமுதாய நலக்கூடம் உள்ளது.

இந்த சமுதாய நலக்கூடத்தில் இருந்து மேற்கு திசை நோக்கி செல்லும் தெருவில் சுமார் 15க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது.

இந்த தெருவில் தெருவிளக்கு, சாலை வசதி, கழிவு நீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் ஏதுமில்லை.

பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் ஜூலை 15ஆம் தேதி ஆன இன்று தன்னை வாக்களித்து வெற்றி பெற செய்த வாக்காளர் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் விசுவக்குடி வந்திருந்தார்.

அப்போது பள்ளிவாசல் அருகே வாகனத்தில் இருந்து இறங்கி வந்து நன்றி தெரிவிக்கும் பொழுது அத்தெருவாசிகள் எம்எல்ஏ-வை சூழ்ந்து கொண்டு தங்களுடைய பிரச்சனைகளை எழுப்பினர்.

பின்னர் அனைத்து பிரச்சினைகளும் ஊராட்சி தலைவரிடம் சொல்லி சரி செய்வதாக எம் எல் ஏ வாக்குறுதி அளித்த பின்னர் அத்தெருவாசிகள் கலைந்து சென்றனர். இதனால் விசுவக்குடியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Video...






விசுவக்குடி ஏரியில் சீரமைப்பு பணிகள் - இறை வணக்கத்துடன் MLA தொடங்கி வைத்தார்


விசுவக்குடி ஏரியில் உபரி நீர் வெளியேறும் கட்டுமானத்தில் விரிசல் என கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊர் மக்களால் கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. அரசும் கோரிக்கையை ஏற்று 5 லட்சத்து 72 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தது.
 






இதனையடுத்து பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் அவர்கள் ஜூலை 15ம் தேதி இன்று இறை வணக்கத்துடன் பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஜமாத் நிர்வாகிகள், அத்தக்வா பள்ளியின் தலைமை இமாம் முஹம்மது சுலைமான் அவர்கள் மற்றும் ஊர் மக்கள் கலந்துகொண்டனர்.