நீங்கள் விரும்பிய மொழியில் விசுவக்குடி அஞ்சலை படிக்க

February 27, 2012

விசுவக்குடி நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்

பெரம்பலூர் மாவட்டம், விசுவக்குடி நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது.


விசுவக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற இந்த அமைப்பின் செயல் வீரர்கள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மேலும், மார்ச். 17-ம் தேதி விசுவக்குடி பகுதியில் சமூக எழுச்சிப் பொதுக்கூட்டம் நடத்துவது. பெரம்பலூரில் இருந்து பிள்ளையார்பாளையம்

February 21, 2012

பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ விசுவக்குடி வருகை!

பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக வருகிற பிப்ரவரி 25ம் தேதி நடைபெறுவதாக இருந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சி மார்ச் 17ம் தேதி மாற்றப்படுவதாக மாவட்ட செயலாளர் இ.தாஹிர் பாஷா விசுவக்குடி அஞ்சலுக்கு தெரிவித்தார்.

இந்த மார்க்க விளக்கப் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு தமுமுக-வின் மூத்த தலைவரும் தற்போதைய இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா அவர்கள் கலந்து கொள்ள இருப்பாதால் இந்த தேதி மாற்றம் என அறிவித்தார்.

February 13, 2012

விசுவக்குடியில் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்!

தமுமுக எனப்படும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடி கிளை சார்பாக மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் விசுவக்குடியில் நடைப்பெறும் என மாவட்ட துணைச்செயலாளர் குதரத்துல்லா அறிவித்துள்ளார்.

விசுவக்குடியில் 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ம் தேதி தமுமுக தொடங்கப்பட்டது.   வருகிற பிப்ரவரி 27ம் தேதி அதன் 4ம் ஆண்டு தொடக்க தினம் ஆகும். அதை முன்னிட்டு முஸ்லிம்களின் உரிமைகளை

விசுவக்குடியில் 18ம் தேதி கந்தூரி மற்றும் மிலாது விழா கொண்டாடப்படுகிறது?

விசுவக்குடியில் வருகிற 18ம் தேதி சனிகிழமை கந்தூரி மற்றும் மீலாது விழா கொண்டாடப்படும் என ஜமாத்தார்கள் ஒன்று கூடி முடிவெடுத்தப்பின் அறிவித்துள்ளனர்.  

இது ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. கந்தூரி விருந்தினை விசுவக்குடியின் அல்-அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் வாலிபர்கள் உணவு பரிமாறி உபசரிப்பார்கள். மாணவ, மாணவியருக்கு போட்டிகள் நடத்தப்பட்டு மீலாது நபி

February 07, 2012

குவைத்தில் எதிர்கட்சி வெற்றி!


குவைத்தில் நடந்த தேர்தலில் எதிர்கட்சி பெருவாரியான இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.

குவைத்தில் 50 தொகுதிகளுக்கான தேர்தல் நடந்தது. இதில் 34 இடங்களை இஸ்லாமிஸ்ட் தலைமையிலான எதிர்க்கட்சி கைபற்றி அமோக வெற்றி ஈட்டியுள்ளது. 

ஆளும் கட்சியிலுள்ள 13 எம்பிக்கள் மீது எழுப்பப்பட்ட ஊழல் புகாரின் காரணமே ஆளும் கட்சியின் படு தோல்விக்குக் காரணம் என தெரிகிறது.

ஊழல் புகார்கள் மிகுந்ததைத் தொடர்ந்து பிரதமருக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் காரணமாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது குறிபிடத்தக்கது.

                                                                                                    நன்றி - இந்நேரம் இணையதளம்
எனது புகைப்படம்
தௌ.மு.ஜகரிய்யாவுக்கும் விசுவக்குடி கிராமத்துக்கும் உள்ள தொடர்பு ஏதோ ஊரளவிலோ பெயரளவிலோ உருவானதல்ல. ஒரு தாய்க்கும் மகனுக்குமான தொப்புள் உறவு. தொடர்பு அறுந்தாலும் உறவு விட்டுப்போவதில்லை அது போலதான் விசுவக்குடிக்கும் தௌ.மு.ஜகரிய்யாவுக்கும் உள்ள தொடர்பு. எழுதுவது என்பது ஒர் அனுபவ பகிர்வு. நம் கருத்துக்கள் சிலருக்காவது பிடிக்குமென்ற நம்பிக்கையில் எழுதும் தௌ.மு.ஜகரிய்யா கிராமங்களின் கலை, அழகு, கலாச்சாரம் என்பது மட்டுமில்லாமல் அங்குள்ள சமுதாய மக்களின் வாழ்வு, காதல், வீரம், வரலாறு, அரசியல் அவற்றுள் இயங்கும் நிலைபடிகள், அடிசரடான நம்பிக்கைகள், வலிகள், உணர்வுகள், கொண்டாட்டங்கள் என்று அனைத்தையும் அறிந்து அறிமுகபடுத்துவதே இவரது நோக்கம்.