ஜனவரி 22, 2023

புதிய மின் மாற்றி மக்களின் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?


விசுவக்குடி 4வது வீதியில் உள்ள வீடுகளில் குறைந்த மின்னழுத்த குறைபாடு தற்போது வரை ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. 

இதனால் பாதிக்கப்பட்ட கிராம பொதுமக்கள் கடந்த ஜூலை 23ஆம் தேதி சனிக்கிழமை காலை திடீரென பேருந்து மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மின்சார வாரிய ஊழியர்கள் இந்த பிரச்சனையை சரி செய்யும் விதமாக புதிய மின் மாற்றி அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்தனர்.

அப்போது பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக புதிய மின்மாற்றி அமைக்க மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது.

(புகார் பதிவு எண்: Petition No 2022/9005/16/394445/072)

கடந்த ஆறு மாதம் ஆன நிலையில் தற்போது தான் தாமதமாக புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

இது மக்களின் பயன்பாட்டிற்கு எப்போது  அர்ப்பணிக்கப்படும் என தெரியவில்லை?

எனவே விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு புதிய மின்மாற்றியை அர்ப்பணிக்குமாறு பொதுமக்களின் சார்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

Previous Post
Next Post

post written by: