செப்டம்பர் 11, 2023

விசுவக்குடியில் 4-வது தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்க கலெக்டரிடம் மனு


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம், அன்னமங்கலம் ஊராட்சியில் விசுவக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அன்னமங்கலம் ஊராட்சியின் வார்டு எண் 2 மற்றும் 3 என இரண்டு ஊராட்சி வார்டுகள் உள்ளது.

இங்குள்ள 2வது வார்டில்  உள்ள  வடக்கு (4வது) தெருவில்  சுமார் 50க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இந்ந தெருவின் ஒருபகுதியில் கிழக்கு திசையில் இதுவரை சாக்கடை வசதி இல்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர் போன்றவர்களிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சிலர்  சாலையோரம் குழி தோண்டி, சாக்கடை நீரை  தேக்கி வைத்துள்ளனர். அதனால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசு உற்பத்தி அதிகமாகி கொசு தொல்லை பெருகி வருகிறது. 

வடிகால் இல்லாததால் மழை காலங்களில் அதிகப்படியான மழையால் சாக்கடை கலந்த மழைநீர் குடியிருப்புகளில் புகுந்து தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

எனவே டெங்கு, மலேரியா  போன்ற நோய்களில் இருந்து இப்பகுதி மக்களை பாதுகாக்கும் விதமாக வருகிற மழை காலத்திற்கு முன்பாக அடிப்படை வசதியான சாக்கடை வசதியை செய்து தருமாறு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது

Previous Post
Next Post

post written by: