மே 17, 2012

விசுவக்குடியில் மழை வேண்டி பாடும் பாடல்

வருடத்தின் ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் விசுவக்குடியில் மழைவேண்டி பாடல் பாடப்படுகிறது. பிச்சை உன்னை கேட்டேன்.... என தொடங்கும் அந்த பாடல் இவ்வூரின் அனைத்து தெருக்களை சுற்றிக் கொண்டே இந்த பாடல் பாடப்படுகிறது. குறைந்தது பத்து நாட்களாவது ஊரைச் சுற்றி பாடப்பட்டு இறுதி நாளில் இஸ்திஸ்கா தொழுகை தொழப்படுகிறது. இந்த பாடலை முகைதீன் ஆண்டவர் பாடிய பாடல் என்றும் கூறப்படுகிறது.

பிச்சை உன்னை கேட்டோம்
பிச்சை உன்னை கேட்டோம்
எங்களை ரட்சிக்க வேண்டும் அல்லா...
ரட்சகன் யாரும் இல்லை
உன்னை அன்றி
ரட்சித்த ரஹ்மானே...
அச்சத்துடனே உன்னை இச்சித்து கேட்கின்றோம்
அச்சத்துடனே உன்னை இச்சித்து கேட்கின்றோம்
இந்த உச்சித மேகத்தால்
மிச்ச மழை பெய்ய! .....(பிச்சை உன்னை)

வேதமுறை மறந்தோம்
வேதமுறை மறந்தோம்
நெறியும் நீதம் தவிழ்தோமே
பேத வழிநடக்க
இதன்படி சோதனையானதல்லா...
யாதும் அறியாத பேதகர் குற்றத்தை
யாதும் அறியாத பேதகர் குற்றத்தை
ஓதி பொறிந்திடும் ஆதியின் ஆதியாய் .....(பிச்சை உன்னை...)

மேகம் வழியாமல்
மேகம் வழியாமல்
எளியோர் சாகும் கெதியாச்சி
தாகம் மிகுதியால் லோகம் மயங்குதல்லா
வாகுடனே மழைமேகம் பொழியவே
வாகுடனே மழைமேகம் பொழியவே
ஏகனே மிக கெஞ்சி உன்னை கேட்கின்றோம் .....(பிச்சை உன்னை)

புல்லும் கருகுதல்லா
புல்லும் கருகுதல்லா
நெல்லும் குறையுதல்லா
பஞ்சத்தில் சொல்லும்
புறக்குதல்லா
வல்லவனே
தொல்லை எல்லாம்
தொலைந்திட
வல்லவனே
தொல்லை எல்லாம்
தொலைந்திட
சொல்லிபோ மேகமே
மழை பெய்ய
செய்தருள் .....(பிச்சை உன்னை)

மாடு ஒடுங்கிறதும்
மாடு ஒடுங்கிறதும்
பூவியில் ஆடு சொடுங்கிறதும்
ஏடு மடங்குறதும்
மரங்கள் பாடு
மடங்குறதும்
காடுகள் வாடுது கோடைமழை பெய்ய
காடுகள் வாடுது கோடைமழை பெய்ய
இந்த கோடை ஜலம் எங்கும்
கூடி வடிந்தருள் .....(பிச்சை உன்னை)

என்னது என்னதல்லா
என்னது என்னதல்லா
ஜனங்கள் கண்ணீரை ஓட்டுதல்லா
ஜனங்கள் அண்ணார்ந்து பார்குதல்லா
பொன்னான எண்ணத்தை
சுண்ணாம்பு பண்ணாமல்
பொன்னான எண்ணத்தை
சுண்ணாம்பு பண்ணாமல்
ஒன்ணான ரப்பே நீ
மழை பெய்ய
செய்தருள் .....(பிச்சை உன்னை)

விதைத்து தெளித்ததெல்லாம்
விதைத்து தெளித்ததெல்லாம்
முளைத்து மொத்தவும்
வாடுதல்லா
குற்றமற்ற
புழுவும் புற்பூண்டுகள்
சுத்தமாய் காயுதல்லா
நித்த மழைபெய்ய
வித்தையும் நாளுண்டும்
மொத்த மழைபெய்ய
உத்தாரம் செய்தருள் .....(பிச்சை உன்னை)

மீராமெகைதீன்
மீராமெகைதீன்
பணிந்து சீருடன்
கேட்ட பிச்சை
பீருபகாஒலிதீன் பொருட்டால்
நீரு தரவேண்டும்
ஏரிகள் நிறைந்திட
விதைகள் விதைந்திட
ஏரிகள் நிறைந்திட
விதைகள் விதைந்திட
நேராய் மழைபெய்ய
வேண்டுமே ரப்பனா.. .....(பிச்சை உன்னை)

                                            - முகைதீன் ஆண்டவர்

 தௌ.மு.ஜகரிய்யா

Previous Post
Next Post

post written by: