தௌ.மு.ஜகரிய்யா...
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பச்சைமலை கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் ஒன்றாகும். அரியவகை மரங்களும், செடிகளும் காணப்படும் இந்த மலையின் பள்ளதாக்கு பகுதியில் உற்பத்தியாகிவரும் கல்லாறு, மழை காலங்களில் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கவும், வறட்சியை போக்கவும் இந்த பகுதி மக்களால் நீண்ட காலமாக அணைக்கட்ட கோரிக்கை எழுப்பப்படுகிறது. 1942 ம் ஆண்டே ஆங்கிலேயர்களால் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கல்லாற்று பகுதியில் உள்ள பெரும்பாலான விவசாய நிலங்கள் போதிய பாசனம் இல்லாததால் தரிசாக மாறிவருகின்றன. இதனால் பெரும்பாலான விவாசயிகள் மாற்று தொழிலை தேடி சென்றது மட்டுமில்லாது அருகில் உள்ள பெரம்பலூர் நகரத்திற்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.
இதனை தடுக்க இந்த விசுவக்குடி பகுதியில் கல்லாற்றின் குறுக்கே அணை அமைப்பதே தீர்வாக அமையும் என கருதப்படுகிறது. இதனால் கிராம தொழிலான விவசாயம் செழிப்பது மட்டுமில்லாது குடிநீர் தட்டுபாடும் குறையும் என்பது இந்த பகுதி விவசாயிகளின் கருத்தாக உள்ளது.
முதன் முதலில் நாகரிகங்கள் தோன்றியது ஆற்றங்கரைகளில் தான். அந்த நாகரிகம் அழந்ததற்கு காரணம் அந்த ஆற்று நீரை முறையாக பயன்படுத்தாதே காரணம் என கூறும் விவசாய சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.
தொடர்புடைய இணைப்புகள்
