மே 24, 2012

முகமது பட்டினம் - இறை இல்லம்
பெரம்பலூர் மாவட்டம் முகமது பட்டினத்தில் உள்ள பள்ளிவாசல் இது. நவீன இஸ்லாமிய கட்டிட கலைக்கு சான்றக திகழ்ந்து வருகிறது.

மே 22, 2012

சமூக எழுச்சி பொதுக் கூட்டத்தின் புகைப்படங்கள்
பெரம்பலூர் மாவட்டம் விசுவக்குடியில்  17.03.2011 அன்று நடைப்பெற்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக சமூகஎழுச்சிப் பொதுக்கூட்டத்தின் புகைப்படங்கள்
வரவேற்புரை நிகழ்த்தும் தமுமுக வின் 
துணைதலைவர் ஜாபர் அலி

மே 18, 2012

விசுவக்குடி - VISVAKUDI


 அமைவு:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம், அன்னமங்கலம் ஊராட்சியில் உள்ள ஒரு கிராமம் தான் விசுவக்குடி.

பெயர்காரணம்:
குடி என்றால் சங்க காலத்தில் மக்களின் இருப்பிடங்களை குடி என சூட்டியிருக்கின்றன. விசுவாசம் மிகுந்த இறையடியார்கள் இங்கு குடியிருப்பதால் விசுவக்குடி என அழைக்கபடுவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன் இவ்வூர் பிஸ்மில்லாகுடி என்று அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
எல்லை:
வடக்கு திசையில் முகமது பட்டினம் கிராமமும், தெற்கு,மேற்கு திசையில் உள்ள பச்சை மலையானது கிழக்கு தொடர்ச்சி மலைகளில் ஒன்றாகும். இந்த மலையில் உற்பத்தியாகிவரும் கல்லாறு விசுவக்குடி கிராம மக்களின் முக்கிய ஆறு. இது விசுவக்குடியின் குடிநீர் தேவையை மட்டுமில்லாது விவசாயத்திற்கு நீர் ஆதாரமாகவும் உள்ளது.

தொழில்: 
வடக்கு, தெற்கு, மேற்கு என மலைகளால் சூழப்பட்ட விசுவக்குடியை சுற்றிலும் வயல்வெளிகள் நிறைந்து காணபடுகிறது. முக்கிய தொழில் விவசாயம் ஆகும். 

மக்கள் தொகை:
2001ம் ஆண்டின் மக்கள் தொகை கணகெடுப்பின்படி ஆண்கள் 704 பேரும், பெண்கள் 611 பேர் என மொத்தம் 1330 பேர் உள்ளனர். 2011 ம் ஆண்டு கணக்கின்படி இங்கு 860 பேர் வாக்காளர்களாக உள்ளனர். 

சமூக குழுக்கள்:
தலித்கள், முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். 

வழிபாட்டு தளங்கள்:
இந்து சகோதரர்களின் கோயில்கள் மட்டுமில்லாது விசுவக்குடியில் இசுலாமியர்களின் தொழுகைக்கூடமான ஜூம்மா பள்ளிவாசல் என்கிற பெயரில் 85 ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக இவ்வூரின் புராதானசின்னமாக நின்று கொண்டிருக்கிறது. இவ்வூர் மாவட்டத்தின் தலைநகரான பெரம்பலூரிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது.

அரசியல்:
விசுவக்குடி அமைந்துள்ள அன்னமங்கலம் ஊராட்சியில் இவ்வூரை சேர்ந்த குதரத்துல்லா தலைவராக உள்ளார். இவ்வூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக கல்லாற்றின் குறுக்கே விசுவக்குடி கல்லாறு நீர்த்தேக்கத் திட்டம் அமைக்க வேண்டும் என்பதாகும். 
விசுவக்குடி கல்லாறு நீர்த்தேக்கத்திட்டம்
தௌ.மு.ஜகரிய்யா...
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பச்சைமலை கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் ஒன்றாகும். அரியவகை மரங்களும், செடிகளும் காணப்படும் இந்த மலையின் பள்ளதாக்கு பகுதியில் உற்பத்தியாகிவரும் கல்லாறு,  மழை காலங்களில் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கவும், வறட்சியை போக்கவும் இந்த பகுதி மக்களால் நீண்ட காலமாக அணைக்கட்ட கோரிக்கை எழுப்பப்படுகிறது. 1942 ம் ஆண்டே ஆங்கிலேயர்களால் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கல்லாற்று பகுதியில் உள்ள பெரும்பாலான விவசாய நிலங்கள் போதிய பாசனம் இல்லாததால் தரிசாக மாறிவருகின்றன.  இதனால் பெரும்பாலான விவாசயிகள் மாற்று தொழிலை தேடி சென்றது மட்டுமில்லாது அருகில் உள்ள பெரம்பலூர் நகரத்திற்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.

இதனை தடுக்க இந்த விசுவக்குடி பகுதியில் கல்லாற்றின் குறுக்கே அணை அமைப்பதே தீர்வாக அமையும் என கருதப்படுகிறது.  இதனால் கிராம தொழிலான விவசாயம் செழிப்பது மட்டுமில்லாது குடிநீர் தட்டுபாடும் குறையும் என்பது இந்த பகுதி விவசாயிகளின் கருத்தாக உள்ளது.

முதன் முதலில் நாகரிகங்கள் தோன்றியது ஆற்றங்கரைகளில் தான். அந்த நாகரிகம் அழந்ததற்கு காரணம் அந்த ஆற்று நீரை முறையாக பயன்படுத்தாதே காரணம் என கூறும் விவசாய சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்
பச்சைமலையில் சொரோபோட்ஸ்கள்?

அரியலூர் பெரம்பலூர் பகுதியில் காணப்பட்ட
சொரோடோப்ஸ் வகை டைனோசர்

சொரோபோட்ஸ்கள்  என்றால் என்ன?

 அப்படி ஒரு இனம் இருந்ததா?  அப்படியென்றால் அந்த இனம் எப்படி அழிந்தது? என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் விசுவக்குடி அருகே உள்ள பச்சைமலை பகுதியிலும் அவை வாழ்ந்திருக்கலாம் என்று எண்ண தோன்றுகிறது!.

2006ல் நடத்திய ஆய்வின் படி குறைந்தது 527 வெவ்வேறு டைனோசர் இனங்கள் உள்ளன. ஆனால் மொத்தம் 1844 தொன்மா இனங்கள் இருந்திருக்கக்கூடும் என கணிக்கின்றனர்.

ஏறத்தாழ 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி 160 மில்லியன் ஆண்டுகள் பூமியின் நிலத்தரையின் முழுவல்லமையுடன் வாழ்ந்து வந்த முதுகெழும்பு விலங்கினங்களான இவை, ஏறத்தாழ 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு பேரழிவு நிகழ்வு காரணமாக முற்றிலுமாய் அழிந்து போயிற்று என நம்பபடுகிறது.
 
பெரும்பாலும் டைனோசர்கள் இரண்டுகால்கள், நான்கு கால்கள் என பலவிதங்களில் வாழ்ந்துள்ளன. 

  நீரில் வாழ்பவை, நிலத்தில் வாழ்பவை, நீரிலும் நிலத்திலும் வாழ்பவை, தாவரங்களை உண்பவை, மாமிசங்களை உண்பவை மற்றும் தாவரம் மாமிசம் இரண்டையும் உண்பவை என பலவகையான டைனோசர் இனங்கள் வாழ்ந்துள்ளன. 

இவற்றின் குறிப்பாக இந்த பெரம்பலூர் அரியலூர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சொரோபோட்ஸ் நான்கு கால்களுடன் கழுத்து நீண்டு இருக்கும் வகையை சார்ந்தவை. இவை இலைதலைகளை உண்பவையாக இருந்துள்ளன.
அரியலூரில் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட
சொரோபோட்ஸ் வகை டைனோசர்
முட்டைகள். இவை ஒவ்வொன்றும்
கால்பந்து அளவில் உள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் மு.ராம்குமார் தலைமையில் பேராசிரியர் கு.அன்பரசு, விரிவுரையாளர் இரா.சுரேஷ் மற்றும் ஆய்வு மாணவர்கள் தி.சுகந்தா, கு.சதீஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்து அரியலூருக்கு வடகிழக்கே ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

 அரியலூர் நகரை ஒட்டிய இப்பகுதியில் குவியல் குவியலாய் பல அடுக்குகளில் இருந்த டைனோசர் முட்டைப் படிமங்கள், முட்டையிட்ட இடங்கள், டைனோசர் எலும்புகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்துச் சேகரித்திருக்கிறார்கள்.

இங்கிருந்து சுமார் 60 டைனோசர் முட்டைகளை எடுத்திருக்கும் இந்தக்குழு, மேலும் ஆயிரக்கனக்கான முட்டைகள் படிமங்களாக இருப்பதையும் கண்டறிந்துள்ளது. மணலில் வளை தோண்டி கூடு மாதிரி உருவாக்கி, அதில்முட்டைகள் இடப்பட்டுள்ளன. ஒவ்வொரு கூட்டிலும் ஆறேழு முட்டைகள் இருக்கின்றன. இப்படி எராளமான முட்டைக் குவியல்கள் இருப்பதால், ஒரு காலத்தில் இங்கு ஆயிரக்கனக்கான டைனோசர்கள் குடும்பம் குடும்பமாக வாழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ஒவ்வொன்றும் ஒரு கால்பந்து அளவில் இருக்கின்ற இந்த முட்டைகள் சொரோபோட்ஸ் எனப்படும் கழுத்து நீண்ட தாவர உண்ணி டைனோசோர் வகையை சேர்ந்தவை என்று ஆய்வுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தின் தற்போதுள்ள நிலப்பகுதிகள் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கடல் பகுதிகளாக இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது திருச்சியிலிருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலை கடற்கரையாக இருந்தது.

பின்னர் நடைப்பெற்ற புவியியல் நிகழ்வுகளால் பூமிக்கு அடியில் உள்ள பாறை தட்டுகள் ஒன்றின் மீது ஒன்று ஏறி கொண்டிருப்பதால், அரியலூர் பகுதி மேலே உயர்த்தப்பட்டு கடல் நீர் வற்றியுள்ளது.

கடலை ஒட்டிய சதுப்பு நில பகுதிகளில்தான் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான மித வெப்ப சீதோஷ்ணம் நிலவியது. நிலப்பகுதியின் உட்புறம் மிகுந்த வெப்பமும் வறட்சியும் கொண்டதாக இருந்தது. 

அரியலூர் அருகில் இப்போது வெற்றுப் பாறையாக இருக்கும் இந்தப் பகுதியில் அந்தக் காலத்தில் வற்றாத ஆறு ஓடி இருக்கிறது. நல்ல தண்ணீரோடு மிகப் பெரிய ஏரி இருந்திருக்கிறது. கடலும் மிக அருகாமையில் இருந்துள்ளது. எனவேதான் இங்கு டைனோசர்கள் பல்கிப் பெருகி பலகாலம் வாழ்ந்துள்ளன.

இவை அரியலூர் பெரம்பலூரிலிருந்து விசுவக்குடி அருகே உள்ள பச்சைமலை குறிப்பிட்ட தொலைவில் இருப்பதால் சொரோடோப்ஸ்கள் உணவைத் தேடி பச்சைமலை பகுதியில் அலைந்திருக்கலாம். ஏன் அவற்றின் இனப்பெருக்க வாழ்விடமாகக் கூட அமைந்திருக்கலாம்?


(தௌ.மு.ஜகரிய்யா...)
aahazack@gmail.com

மே 17, 2012

விசுவக்குடி கிராமம்
விசுவக்குடி தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். விசுவக்குடியை சுற்றிலும் வயல்வெளிகள் நிறைந்து காணப்படுகிறது. முக்கிய தொழில் விவசாயம். இவ்வூர் மாவட்டத்தின் தலைநகரான பெரம்பலூரிலிருந்து 14கி.மீ தொலைவில் உள்ளது.

விசுவக்குடி உங்களை அன்புடன் 
வரவேற்கும் காட்சி
விசுவக்குடியில் மழை வேண்டி பாடும் பாடல்
வருடத்தின் ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் விசுவக்குடியில் மழைவேண்டி பாடல் பாடப்படுகிறது. பிச்சை உன்னை கேட்டேன்.... என தொடங்கும் அந்த பாடல் இவ்வூரின் அனைத்து தெருக்களை சுற்றிக் கொண்டே இந்த பாடல் பாடப்படுகிறது. குறைந்தது பத்து நாட்களாவது ஊரைச் சுற்றி பாடப்பட்டு இறுதி நாளில் இஸ்திஸ்கா தொழுகை தொழப்படுகிறது. இந்த பாடலை முகைதீன் ஆண்டவர் பாடிய பாடல் என்றும் கூறப்படுகிறது.

பிச்சை உன்னை கேட்டோம்
பிச்சை உன்னை கேட்டோம்
எங்களை ரட்சிக்க வேண்டும் அல்லா...
ரட்சகன் யாரும் இல்லை
உன்னை அன்றி
ரட்சித்த ரஹ்மானே...
அச்சத்துடனே உன்னை இச்சித்து கேட்கின்றோம்
அச்சத்துடனே உன்னை இச்சித்து கேட்கின்றோம்
இந்த உச்சித மேகத்தால்
மிச்ச மழை பெய்ய! .....(பிச்சை உன்னை)

வேதமுறை மறந்தோம்
வேதமுறை மறந்தோம்
நெறியும் நீதம் தவிழ்தோமே
பேத வழிநடக்க
இதன்படி சோதனையானதல்லா...
யாதும் அறியாத பேதகர் குற்றத்தை
யாதும் அறியாத பேதகர் குற்றத்தை
ஓதி பொறிந்திடும் ஆதியின் ஆதியாய் .....(பிச்சை உன்னை...)

மேகம் வழியாமல்
மேகம் வழியாமல்
எளியோர் சாகும் கெதியாச்சி
தாகம் மிகுதியால் லோகம் மயங்குதல்லா
வாகுடனே மழைமேகம் பொழியவே
வாகுடனே மழைமேகம் பொழியவே
ஏகனே மிக கெஞ்சி உன்னை கேட்கின்றோம் .....(பிச்சை உன்னை)

புல்லும் கருகுதல்லா
புல்லும் கருகுதல்லா
நெல்லும் குறையுதல்லா
பஞ்சத்தில் சொல்லும்
புறக்குதல்லா
வல்லவனே
தொல்லை எல்லாம்
தொலைந்திட
வல்லவனே
தொல்லை எல்லாம்
தொலைந்திட
சொல்லிபோ மேகமே
மழை பெய்ய
செய்தருள் .....(பிச்சை உன்னை)

மாடு ஒடுங்கிறதும்
மாடு ஒடுங்கிறதும்
பூவியில் ஆடு சொடுங்கிறதும்
ஏடு மடங்குறதும்
மரங்கள் பாடு
மடங்குறதும்
காடுகள் வாடுது கோடைமழை பெய்ய
காடுகள் வாடுது கோடைமழை பெய்ய
இந்த கோடை ஜலம் எங்கும்
கூடி வடிந்தருள் .....(பிச்சை உன்னை)

என்னது என்னதல்லா
என்னது என்னதல்லா
ஜனங்கள் கண்ணீரை ஓட்டுதல்லா
ஜனங்கள் அண்ணார்ந்து பார்குதல்லா
பொன்னான எண்ணத்தை
சுண்ணாம்பு பண்ணாமல்
பொன்னான எண்ணத்தை
சுண்ணாம்பு பண்ணாமல்
ஒன்ணான ரப்பே நீ
மழை பெய்ய
செய்தருள் .....(பிச்சை உன்னை)

விதைத்து தெளித்ததெல்லாம்
விதைத்து தெளித்ததெல்லாம்
முளைத்து மொத்தவும்
வாடுதல்லா
குற்றமற்ற
புழுவும் புற்பூண்டுகள்
சுத்தமாய் காயுதல்லா
நித்த மழைபெய்ய
வித்தையும் நாளுண்டும்
மொத்த மழைபெய்ய
உத்தாரம் செய்தருள் .....(பிச்சை உன்னை)

மீராமெகைதீன்
மீராமெகைதீன்
பணிந்து சீருடன்
கேட்ட பிச்சை
பீருபகாஒலிதீன் பொருட்டால்
நீரு தரவேண்டும்
ஏரிகள் நிறைந்திட
விதைகள் விதைந்திட
ஏரிகள் நிறைந்திட
விதைகள் விதைந்திட
நேராய் மழைபெய்ய
வேண்டுமே ரப்பனா.. .....(பிச்சை உன்னை)

                                            - முகைதீன் ஆண்டவர்

 தௌ.மு.ஜகரிய்யா