அக்டோபர் 02, 2019

விசுவக்குடி பள்ளிவாசல் பின்புறம் உள்ள தெருவில் சோலார் மின்விளக்கு அமைக்க வேண்டும். கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று (அக்:2) பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலத்தில் கிராமசபை கூட்டம் நடைப்பெற்றது. 

இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டி இன்று காலை விசுவக்குடி பள்ளிவாசலில் உள்ள ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் அன்னமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அப்துல் ஹக், அல் அமீன் இளைஞர் மன்ற தலைவர் முபாரக் அலி, தமுமுக மாவட்ட செயலாளர் குதரத்துல்லா, ஜமாத் தலைவர் காதர் ஒலி, முன்னாள் ஊராட்சி மன்ற 2வது வார்டு உறுப்பினர் முஸ்தபா,  சாலிகரீம் மற்றும் இளைஞர்கள் என சுமார் 20 பேர் கலந்து கொண்டனர்.

இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வேப்பந்தட்டை,  விசுவக்குடி வழிதடத்தில் பெரம்பலூரில் இருந்து பூலாம்படிக்கு புதிய வழிதடத்தில் பேருந்து இயக்குதல்,

வேப்பந்தட்டை, அன்னமங்கலம், கிருஷ்ணாபுரம் புதிய வழிதடத்தில்  பெரம்பலூரில் இருந்து வீரகனூருக்கு பேருந்து இயக்குதல்,

அன்னமங்கலத்தில் ஏடிஎம் வசதியுடன் கூடிய தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியை ஏற்படுத்துதல்,

முகமது பட்டினத்தில் இருந்து கிருஷ்ணாபுரம் செல்லும் சாலையை மீண்டும் தரமாக சீரமைத்தல்,

விசுவக்குடியில் இருந்து விசுவக்குடி அணை செல்லும் சாலையை தார் சாலையாக தரம் உயர்த்துதல்,

விசுவக்குடி பள்ளிவாசல் பின்புறம் உள்ள தெருவில் சோலார் மின்விளக்கு அமைத்தல்.... போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Previous Post
Next Post

post written by: