பெரம்பலூர் மாவட்டம், விசுவக்குடி அத்-தக்வா பள்ளிவாசல் ஜமாத் புதிய நிர்வாகிகள் தேர்வு நேற்று (அக்.6) இரவு 9:30 மணியளவில் நடைப்பெற்றது.
ஓய்வு ஆசிரியர் அமானுல்லா அவர்களின் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வை பள்ளியின் இமாம் முஹம்மது சுலைமான் இறைமறை ஓதி தொடங்கி வைத்தார்.
முதலில் செயற்க்குழு உறுப்பினர்கள் 18 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலைவராக ஹாஜி ரஜாக் (முதல்வீதி), செயலாளராக முஸ்தபா, பொருளாளராக ஓய்வு ஆசிரியர் அமானுல்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
பின்னர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். துணை தலைவர், துணை செயலாளர் போன்ற பதவிகளை செயற்குழு கூடி இன்னொரு நாளில் முடிவு செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் விசுவக்குடி ஜமாத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
