அக்டோபர் 02, 2019

ஒரே திட்டத்திற்காக இரண்டு முறை ஒதுக்கப்பட்ட நிதி: கிராமமக்கள் நீர் ஆதாரத்திற்காக காத்திருக்கிறார்கள்

ஒரே  குடிநீர் திட்டத்துகாக இரண்டு முறை நிதி ஒதுக்கப்பட்டதாக விசுவக்குடி கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் பணிகள் முழுமையாக செய்து முடிக்கவில்லை. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியில் உள்ள இந்த விசுவக்குடி கிராமம் குடிநீர் தட்டுபாட்டை சந்தித்து வருகின்றது. 

ஒரு கிணற்றில் இருந்து, அங்கு வசிப்பவர்களுக்கு நீர் ஆதாரமாக மின் மோட்டார், பைப்லைன், பம்ப்ரூம் மற்றும் அந்த கிணற்றை சுற்றி சுற்றுசுவர் அமைக்க 27 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை  டெண்டர் அறிவித்துள்ளது.

ஆனால் தற்போது  இரண்டாவது முறையாக இதே திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக கிராம மக்கள் புகார் கூறினர். 2018-2019 ஆம் ஆண்டில், மாவட்ட ஊரக வளர்ச்சி துறை  (DRDA) இதே நோக்கத்திற்காக ரூ .18.71 லட்சம் ஒதுக்கியது, ஆனால் கிணறு மட்டுமே  தோண்டப்பட்டது. பம்ப் மோட்டார்கள் நிறுவப்படவில்லை மேலும் பைப்லைன் அமைக்கவில்லை.  இந்த திட்டம் முடிவடைய வேண்டும் என்று கிராம மக்கள் பலமுறை வலியுறுத்தினர்.  இதன் விளைவாக மாவட்ட ஊரக வளர்ச்சி துறை முழுமையடையாத இத்திட்டத்திற்கு மீண்டும் நிதி ஒதுக்குகிறது.

400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விசுவக்குடியில் வசிக்கின்றன.  பஞ்சாயத்து யூனியன் மூலமாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கடுமையான குடிநீர் தட்டுபாடு இங்கு நிலவுகிறது. இதன் காரணமாக,  மாவட்ட ஊரக வளர்ச்சி துறை குடிநீர் கிணறு அமைக்க முடிவு செய்தது. முதல் சந்தர்ப்பத்தில், கிணறு 70 அடிக்கு தோண்டப்பட்டது, ஆனால் குடிநீர்  எதுவும் கிடைக்கவில்லை. பின்னர் எந்த வேலையும் செய்யப்படாமல், திட்ட விவரங்களைப் பற்றிய ஒரு பலகை  மட்டுமே அங்கு அமைக்கப்பட்டது. 

மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் புதிய நிதி ஒதுக்கீட்டைப் பற்றி அறிந்ததும், திங்களன்று மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்ய அவர்கள் மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு  வந்தார்கள். 
கிராமவாசி அ. குதுரதுல்லா கூறுகையில், “பஞ்சாயத்து 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீரை வழங்குகிறது, ஆனால் எங்களுக்கு  தினமும் குடிநீர் தேவை. நாங்கள் பஞ்சாயத்து மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பல புகார்களை பதிவு செய்திருந்தாலும், அது அனைத்தும் வீணானது ”.

"தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்" வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர். இளங்கோவனைத் தொடர்பு கொண்டபோது, ​​அவர் கூறினார், “எங்களுக்கு காரணங்கள் உள்ளன. நங்கள் எந்த தவறும் செய்யவில்லை.

பட விளக்கம்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விசுவக்குடி கிராமத்தில் கிணறு புதிதாக தோண்டப்பட்டாலும், பல புகார்கள் வந்தாலும் இங்கு தண்ணீர் கிடைக்கவில்லை.

Box News: மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள், அவர்களுக்கு ஒரு பலகை மற்றும் ஆழமான கிணறு  மட்டுமே  கிடைத்தது, வேறு ஒன்றும் இல்லை". என்று  கிராமவாசிகள் சொன்னார்கள்: அவர்கள் பஞ்சாயத்து அலுவலகத்தை அணுகினர், ஆனால் அதிகாரிகள் பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மூன்று மனுக்களுடன் இப்பிரச்சனையை தொடர்ந்தனர், ஆனால் மீண்டும் எந்த பலனும் இல்லை.

இது நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வந்த செய்தியின் மொழியாக்கம்

நன்றி: ஜெய்னுதீன் - சவுதி அரேபியா





Previous Post
Next Post

post written by: