அக்டோபர் 02, 2019

கிராமசபை கூட்டங்களை சுழற்சி முறையில் கிளை கிராமங்களில் நடத்த வேண்டும். முன்னாள் அன்னமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை

கிராம சபை கூட்டங்களை சுழற்சி முறையில் கிளை கிராமங்களில் நடத்த வேண்டும். விதிகள் மாற்றப்பட்டதாக கூறுவதை ஏற்க முடியாது என முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று (2ம் தேதி) கிராமசபை கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இந்த கூட்டங்களை ஊராட்சியின் தலைமை இடத்திலேயே நடத்தாமல் ஊராட்சிக்கு உட்பட்ட கிளை கிராமங்களில்  சுழற்சி அடிப்படையில் மாறிமாறி நடத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து அன்னமங்கலம் ஊராட்சியில் தொடர்ந்து 10 ஆண்டுகள் தலைவராக பதவி வகித்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விசுவக்குடி அப்துல் ஹக் ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது.
நான் அன்னமங்கலம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த போது கிளை கிராமமான அரசலூரில் கிராமசபை கூட்டத்தை நடத்தியுள்ளேன். ஆனால் மற்றோரு கிளை கிராமமான விசுவக்குடி கிராமத்தில் கிராம சபைக் கூட்டத்தை நடத்த மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்தும் நடத்த மறுக்கிறார்கள்.
அந்தந்த கிளை கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்களை ஆண்டுக்கு ஒருமுறை நடத்தினால் தான் கிளை கிராமத்திற்கு ஒதுக்கப்பட்டு செலவிடப்பட்ட நிதி விபரங்கள் அக்கிராம அனைத்து மக்களுக்கும் தெரியவரும்.
இதுபற்றி எங்கள் ஊரைச் சேர்ந்த ஜகரிய்யா என்பவர் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் தீர்வு கிடைக்காத நிலையில் சமீபத்தில் காந்தி ஜெயந்தி அன்று நடத்தப்படும் கிராமசபை கூட்டத்தையாவது விசுவக்குடியில் நடத்த வேண்டும் என தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு அனுப்பிய கோரிக்கை மனுவுக்கு, வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பாக அளித்துள்ள பதிலில்
முதலில் மனுதாரரின் கோரிக்கை ஏற்க்கபட்டு கிளை கிராமங்களில் சுழற்சி அடிப்படையில் கிராம சபை கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்படுமென்றும், பிறகு அடுத்த வந்த பதிலில் அன்னமங்கலம் ஊராட்சி அரசலூர், விசுவக்குடி, முகமது பட்டினம், பிள்ளையார் பாளையம், ஈச்சங்காடு, பூம்புகார் ஆகிய 6 கிளை கிராமங்கள் இருப்பதால் அத்தனை கிராமத்தினரின் கோரிக்கை தலைமை இடத்தில் இருந்து மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதால் கோரிக்கை மனு நிராகரிக்கப்படுவதாகவும், இருவேறு முரண்பட்ட பதில்கள் தரப்பட்டுள்ளன.
இது அதிகாரிகளின் குழப்ப நிலையை காட்டுகிறது. விரைந்து தெளிவான முடிவெடுத்து கிளை கிராமங்களுக்கு சாதகமான பதில்களை தரவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதனால் கிராம சபைக் கூட்டங்களை பொதுமக்களின் எதிர்ப்புகளை சமாளிப்பதற்காக, பல ஊராட்சிகளில் கிளை கிராமத்தினர் வந்து சேரும் முன்பாக உள்ளூரை சேர்ந்த குறைந்த நபர்களைக் கொண்டு, திட்ட பணிகள் முறைகேடு குறித்துக் கேள்வி எழுப்பாத மகளிரை வைத்துக் கொண்டு பிரச்சினைகள் வெடிக்கும் முன்பாக நடத்தி முடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.








கிராமசபை கூட்டங்களை சுழற்சி முறையில் கிளை கிராமங்களில் நடத்த வேண்டும். முன்னாள் அன்னமங்கலம்  ஊராட்சி மன்ற தலைவர் அப்துல் ஹக் கோரிக்கை


 நன்றி: தினகரன்

அக்டோபர்:2


Previous Post
Next Post

post written by: