விசுவக்குடி ஜமாத் தலைவராக இருந்த ஷேக் அப்துல் ஹமீத் அவர்கள் கடந்த 2013 ம் ஆண்டு ஜனவரி மாதம் 29ம் தேதி உடல் நல குறைவால் இயற்கை எய்தினர்.
அடுத்த தலைவராக காதர் அலி அவர்கள் 4ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிலையில் ஜமாத் நிர்வாகத்தில் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது அமைக்கப்பட்ட புதிய நிர்வாக குழுவில் தலைவராக முஹம்மது மீரா, செயலாளராக குதரத்துல்லா, பொருளாளராக அப்துல் அலிம் போன்றோர் தேர்வாகி உள்ளனர்.
தற்போதைய புதிய நிர்வாகம் மார்க்கம், ஊரின் வளர்ச்சி போன்ற விசயங்களில் சேவையை அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கபடுகிறது..
