ஏப்ரல் 05, 2017

விசுவக்குடியில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

 இக்ரா தீனியாத் பாடசாலை, தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் இணைந்து நடத்தும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நாளை (ஏப்ரல் 06) வியாழ கிழமை விசுவக்குடி சமுதாய நலக் கூடத்தில் நடைபெறுகிறது.

தற்கால சூழலுக்கு ஏற்ற படிப்புகள் குறித்த அரிய ஆலோசனைகளை காணொளி காட்சி மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாலிகண்டபுரம் அன்னை ஆயிஷா பெண்கள் மற்றும் கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் சம்சுதீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார்.

உயர்கல்வி வழிகாட்டி ஆலோசகர்களான தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் முஹம்மது இஸ்மாயில் மற்றும் லயானிஷா போன்றோர் பங்குபெறுகின்றனர்.

10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தங்களின் சந்தேகங்களை கேள்விகளாக கேட்டு விளக்கம் பெறலாம்.

இந்நிகழ்ச்சி காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெறுகிறது.

Previous Post
Next Post

post written by: