விசுவக்குடி ஏரியில் உபரி நீர் வெளியேறும் கட்டுமானத்தில் விரிசல் என கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊர் மக்களால் கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. அரசும் கோரிக்கையை ஏற்று 5 லட்சத்து 72 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தது.
இதனையடுத்து பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் அவர்கள் ஜூலை 15ம் தேதி இன்று இறை வணக்கத்துடன் பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஜமாத் நிர்வாகிகள், அத்தக்வா பள்ளியின் தலைமை இமாம் முஹம்மது சுலைமான் அவர்கள் மற்றும் ஊர் மக்கள் கலந்துகொண்டனர்.



