பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் ஊராட்சியில் விசுவக்குடி கிராமம் உள்ளது. இங்குள்ள ஊராட்சி வார்டு எண் 2ல் பள்ளிவாசல் அருகே அல் ஜன்னத் சமுதாய நலக்கூடம் உள்ளது.
இந்த சமுதாய நலக்கூடத்தில் இருந்து மேற்கு திசை நோக்கி செல்லும் தெருவில் சுமார் 15க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது.
இதுவரை இத்தெருவில் ஒரு தெருவிளக்கு கூட அமைக்கப்படாததால் இப்பகுதியில் வசித்து வருபவர்கள் பல சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
பணி முடிந்து இரவு வீட்டிற்கு செல்பவர்களும், தொழுகையை நிறைவேற்ற பள்ளிவாசல் சென்று வருபவர்களும், டியூஷன் சென்று வரும் மாணவ, மாணவிகளும் மற்றும் இன்னபிற வேலை நிமித்தமாக வெளியில் சென்று வருபவர்களும் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.
இதனால் இரவு நேரங்களில் சிறுவர்கள் வீட்டைவிட்டு வெளியில் வருவதற்கு கூட பயப்படுகின்றனர். தனியாக செல்லும் பெண்களிடம் வழிமறித்து பணம், நகை உள்ளிட்டவற்றை பறித்து செல்லும் வாய்ப்பும் உள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்த தெருவில் சாலை வசதி இல்லாமல் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மண் பாதையாக இருப்பதால் மழைக்காலங்களில் சேரும் சகதியுமாக நடந்து செல்ல சிரமப்பட வேண்டிய நிலை காணப்படுகிறது. இதனால் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பார்கள் வழுக்கி விழுந்து அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.
மேலும் சாக்கடை வசதி இல்லாத காரணத்தால் தண்ணிர் தேங்கி தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.
ஆகையால் தயவுகூர்ந்து தெருவிளக்கு மற்றும் சாக்கடை வசதியுடன் சாலை அமைத்து தருமாறு தாழ்மையுடன் கிராம மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.
மனு எண் :
தங்களுடைய மனு எண்2022/9005/16/394441/0723 பெறப்பட்டது. தங்கள் மனுவின் நிலையை https://gdp.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் - தமிழ்நாடு மின்ஆளுமை முகமை.
