பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் ஊராட்சியில் விசுவக்குடி கிராமம் உள்ளது. இங்குள்ள ஊராட்சி வார்டு எண் 2ல் பள்ளிவாசல் அருகே அல் ஜன்னத் சமுதாய நலக்கூடம் உள்ளது.
இந்த சமுதாய நலக்கூடத்தில் இருந்து மேற்கு திசை நோக்கி செல்லும் தெருவில் சுமார் 15க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது.
இந்த தெருவில் தெருவிளக்கு, சாலை வசதி, கழிவு நீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் ஏதுமில்லை.
பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் ஜூலை 15ஆம் தேதி ஆன இன்று தன்னை வாக்களித்து வெற்றி பெற செய்த வாக்காளர் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் விசுவக்குடி வந்திருந்தார்.
அப்போது பள்ளிவாசல் அருகே வாகனத்தில் இருந்து இறங்கி வந்து நன்றி தெரிவிக்கும் பொழுது அத்தெருவாசிகள் எம்எல்ஏ-வை சூழ்ந்து கொண்டு தங்களுடைய பிரச்சனைகளை எழுப்பினர்.
பின்னர் அனைத்து பிரச்சினைகளும் ஊராட்சி தலைவரிடம் சொல்லி சரி செய்வதாக எம் எல் ஏ வாக்குறுதி அளித்த பின்னர் அத்தெருவாசிகள் கலைந்து சென்றனர். இதனால் விசுவக்குடியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Video...
