பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே விசுவக்குடி கிராமம் உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள மின்மாற்றியில் குறைந்த மின்னழுத்தத்தின் காரணமாக 220 வோல்ட் மின்சாரத்திற்கு பதில் மிகக் குறைந்த அளவாக சுமார் 150 வோல்ட் மின்சாரம் சப்ளை ஆவதால் போதிய அளவு மின்சாரம் இன்றி இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனால் வீடுகளில் உள்ள மின்விளக்கு, மின்விசிறி, டி.வி மற்றும் குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட மின்சாதன பொருட்களை இயக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக மின்சாதன பொருட்கள் பழுதாகி வருகின்றன.
மேலும், குறைந்த மின்னழுத்தத்தால் இந்தபகுதி பொதுமக்கள் சமையலுக்கு மாவு அரைத்தல், வீட்டு ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தொட்டிகளில் நீர் நிரப்புதல், வாசிங் மெசின்களில் துணி துவைத்தல்... போன்ற தங்களது அன்றாட பணிகளை விரைந்து முடிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். தற்போது வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மின் விசிறியை இயக்க முடியாததால் முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் உள்ளிட்ட அனைவரும் வியர்வையாலும், கொசு கடியாலும் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே விசுவக்குடி கிராமத்தில் கூடுதலாக இன்னொரு புதிய மின்மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
Your Petition No 2022/9005/16/394445/0723 is received. URL to check the status: https://gdp.tn.gov.in - Tamil Nadu e-Governance Agency.
