தொடர் மின்வெட்டு, குறைந்த மின்னழுத்தம், முறையாக குடிநீர் சப்ளை செய்யாதது, மூன்றாவது வீதியில் உடைந்த பாலத்தை சீர் செய்யாதது... போன்ற பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கக்கோரி விசுவக்குடி பேருந்து நிறுத்தத்தில் இன்று காலை 8:30 மணி முதல் 10 மணி வரை பஸ் மறியல் போராட்டம் நடைபெற்றது.
பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பஸ் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
