விசுவக்குடி ஏரியில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்களை அகற்றி மின்சாரத்தை மாற்று வழியில் கொண்டு சொல்லுமாறு வேப்பந்தட்டை உதவி மின் பொறியாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதன் விவரம்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது விசுவக்குடி கிராமம்.
இவ்வூரின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் அருகே ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியை சுற்றியுள்ள விளை நிலங்களுக்கும் கிணறுகளுக்கும் நீராதரமாக இந்த ஏரி உள்ளது.
இந்த ஏரியின் நடுவே உள்ள மண்மேட்டின் மீதுள்ள மீன்கம்பம் வழியாக மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது.
மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில் நீர்நிலையான இந்த ஏரியில் நீர் நிரம்பினால் மண்மேடு கரைந்து மின் கம்பம் கீழே விழும் அபாயம் உள்ளது.
எனவே நீர் நிலையான ஏரியில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்களை அகற்றி மின்சாரத்தை மாற்று வழியில் கொண்டு சொல்லுமாறு கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மனுவை வேப்பந்தட்டை உதவி மின் பொறியாளர் செந்தில் குமாரிடம் அன்னமங்கலம் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் செல்வகுமார் வழங்கினார். அப்போது சமூக ஆர்வலர் முஹம்மது ஜகரிய்யா, 2வது வார்டு உறுப்பினர் குதரத்துல்லா ஆகியோர் உடனிருந்தனர்.

