செப்டம்பர் 21, 2021

விசுவக்குடி ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த ஊராட்சி தலைவரிடம் கோரிக்கை


பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது விசுவக்குடி கிராமம். 

இவ்வூரின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் அருகே ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியை சுற்றியுள்ள விளை நிலங்களுக்கும் கிணறுகளுக்கும் நீராதரமாக இந்த ஏரி உள்ளது. 

இந்த ஏரி பல ஆண்டுகாலமாக தூர்வாரப்படாததால் கருவேல மரங்களாகவும், மண்மேடுகளாகவும் காட்சி அளிக்கிறது.

எனவே இந்த ஏரியில் உள்ள கருவேல மரங்களையும், மண்மேடுகளையும் அகற்றி ஜே.சி.பி இயந்திரம் கொண்டு தூர்வாரி ஆழப்படுத்தி *இப்பகுதி மக்களின் நீர் ஆதாரத்தை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.






Previous Post
Next Post

post written by: