பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் தற்போது பருவ மழை பெய்தாலும் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில் மழை பெய்யவில்லை. அதாவது எந்த ஊரிலும் ஏரி குளங்களில் தண்ணீர் நிரம்பவில்லை. இதனால் பெரும்பாலான ஊர்களில் குடிநீர் பஞ்சம் இருந்து வருகிறது. மேலும் கிணற்றுப்பாசனம் மூலம் செய்யக்கூடிய விவசாயமும் பெரும் பாதிப்படைந்துள்ளது.
எனவே நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில் மழை பெய்ய வேண்டி விசுவக்குடி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி இமாம் முஹம்மது சுலைமான் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்றுதிரண்டு அத்-தக்வா பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக அருகிலுள்ள களத்துமேடு என்ற பகுதிக்கு சென்றனர். அங்கு அனைவரும் ஒன்றுகூடி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் பஞ்சம் நீங்க வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் சிறப்பு தொழுகை நடத்தினர்.
செப்டம்பர்: 25, 2020
https://youtu.be/_QCG00d5UrM

