செப்டம்பர் 19, 2019

தெரிந்து கொள்வோம்...

நமதூர் விசுவக்குடியில் இருந்து வடக்கு திசையை நோக்கினால் ஒரு மலை தெரியும் அல்லவா. முகமது பட்டினம், பிள்ளையார் பாளையம் வழியாக தொண்டமாந்துறை செல்லும் போது இந்த மலையை அருகில் பார்த்திருப்போம்... அருகில் பயணித்திருப்போம்.

இப்போ அதுக்கு என்னா? என்று நினைக்கிறீர்களா,

கிழக்கு, மேற்கு திசையாக நீண்டு இருக்கும் இந்த மலையினுடைய ஒரு குறிப்பிட்ட பகுதி கனிமம் மற்றும் சுரங்கதுறையின் கட்டுபாட்டிலும் மேலும் ஒருபகுதி தனிநபர் ஒருவருக்கு சொந்தமாகவும் உள்ளது. 

உண்மையாகவா? ஆம். அந்த மலையின் மேல் உள்ள முருகன் கோவிலும் அவருக்கே சொந்தமானது. 

எதிர்காலத்தில் பயன்படும் என்று நினைத்தால்  இந்த மலையில் நீங்கள் நிலம் வாங்கலாம். இந்த மலையை பற்றி இதுமட்டுமா?

இந்த மலையில் உள்ள குவாரிகள், கிரஷர்கள் ஆண்டுக்கு சுமார் 50 கோடிக்கும் அதிகமான வருவாயை ஈட்டிதருகிறதாம். இந்த மலையில் பரியாறி என்ற பெயரில் ஒரு குட்டை உள்ளதாம். இந்த குட்டையில் உள்ள நீர் வறட்சி காலங்களில் கூட வற்றாதாம்.

அருகில் உள்ள பச்சைமலை வனத்துறையின் கட்டுபாட்டில் சேர்த்த போது இந்த மலையை ஏன் சேர்க்காமல்விட்டார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை கால்நடைகளை மேய்க்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இங்குள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பார்களோ?

இதுபோல் நிறைய எழுத வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் இதுபோன்ற தகவல்களை குழுவில் உள்ளவர்கள் படிப்பார்களா? என்றுதான் தெரியவில்லை.
Previous Post
Next Post

post written by: