டிசம்பர் 14, 2012

விசுவக்குடி, முஹம்மது பட்டினம் பொறுப்பாளராக ரியாஸ் அஹமது தேர்வு

பெரம்பலூரில் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு அண்மையில் நடைபெற்றது.

அமைப்பின் மாநிலத் தேர்தல் அலுவலர் அமீர்பாட்ஷா தலைமை வகித்தார்.

இதில் வி.முஜ்புர் ரஹ்மான் மாவட்டத் தலைவராகவும், வி.களத்தூர் நகரத் தலைவராக அப்துல் ரஹீம், லப்பைகுடிகாடு நகரத் தலைவராக சித்திக் பாட்ஷா, விசுவக்குடி, முஹம்மது பட்டினம் பொறுப்பாளராக ரியாஸ் அஹமது, அரும்பாவூர், பூலாம்பாடி பெரியம்மாபாளையம் பகுதி பொறுப்பாளராக காஜாசெரீப், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக அபுபக்கர் சித்திக், எஸ். சையதுஹாரூன், முஹம்மது ரபீக் முஹம்மது, அலி, சர்தார் பாய் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Previous Post
Next Post

post written by: