விசுவக்குடியிலிருந்து விசுவக்வகுடி அணை செல்லும் சாலையை தார் சாலையாக அமைக்க வேண்டும் என்பது இங்குள்ள மக்களின் சுமார் 10 ஆண்டுகால கோரிக்கையாகும்.
அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு தற்போது மக்களின் வரிப்பணத்தில், சுமார் 106 லட்சம் செலவில் தார்சாலை அமைப்பதற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் நல்லதம்பி அவர்கள் தார் சாலை அமைப்பதற்கான ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இன்று மாலைக்குள் தார் சாலை அமைக்கும் பணிகள் நிறைவடையும் என தெரிகிறது. ஆனால் சாலை வெறும் 20 mm அளவிற்கு மட்டுமே போடப்பட்டு வருகிறது. இதனால் இந்த சாலை பாரம் தாங்குமா? என தெரியவில்லை.
இந்த சாலையை இன்னும் சற்று தடிமனாக அமைத்து இருந்திருக்கலாம்.
