பெரம்பலூர் மாவட்டம், விசுவக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். மாற்று திறனாளியான இவருக்கு வயது 28. ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர் ஓட்டுனர் பணி புரிகிறார். கடந்த ஜூன் 3 முதல் 10 ம் தேதி வரை குஜராத் மாநிலத்தில் நடைப்பெற்ற தேசிய சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டார்.
இதில் குண்டு எறிதல் போட்டியில் 11.40 மீட்டர் தூரத்திற்கு குண்டிணை வீசி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். மேலும் கால் குறைபாடு உடையோருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் 13.18 விநாடிகளில் கடந்து மற்றும் ஒரு தங்கத்தை வென்றார்.
நமது ஊருக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த இவரை பாராட்டுவது மட்டுமில்லாமல் அடுத்த போட்டிகான பயிற்சியில் ஈடுபட கொடையாளர்கள் உதவிசெய்ய முன்வரவேண்டும்.
திறமைக்கு ஊனம் தடையில்லை என்பதை நிரூபித்த விசுவக்குடி கிராமத்தை சார்ந்த ரமேஷ் சர்வதேச அளவில் மேலும் சாதனை படைக்க வாழ்த்துவோம். +91 98 65 517335
