நமதூர் விசுவக்குடியில் நேற்று (ஜூன்10) இந்த ஆண்டு 10 மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விதமாக பரிசுகள் வழங்கப்பட்டது.
விசுவக்குடி இணையதளம் சார்பாக மௌலானா அப்துல் ஹை அவர்களும், அத்-தக்வா பள்ளியின் இமாம் மௌலான முஹம்மது சுலைமான் அவர்களும் பரிசுகளை வழங்கினார்கள்.
மேலும் இந்த ஆண்டு விசுவக்குடியில் நீதித்துறை சார்ந்த படிப்புகளை படிக்க ஆர்வம் இருந்தும், படிக்க வசதிகள் இல்லாத நிலையில் இருந்தால் அவர்களுக்கான கல்வி கட்டணத்தை இன்ஷா அல்லாஹ் விசுவக்குடி இணையதளம் ஏற்க தயாராக உள்ளது என்பதையும் தெரியப்படுத்துகிறோம்.

